Wednesday, October 11, 2017

விடுதியின் தண்ணீர் தொட்டிக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்த கல்லூரி மாணவி!


விடுதியின் தண்ணீர் தொட்டிக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்த கல்லூரி மாணவி!உடுமலை அரசு கலைக்கல்லூரியின் மாணவியர் விடுதி தண்ணீர் தொட்டியில் மர்மமான முறையில் உயிர் இழந்த மாணவி சடலத்தை மீட்டு காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக்கல்லூரியில், கேரள மாநிலம் மூணாறு பகுதியை சேர்ந்த பாஸ்டின் என்பவரது மகள்  ஏஞ்சல் புஷ்பா, வணிகவியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார், இவர் விடுதியில் தங்கியிருந்தார்.

இந்நிலையில் மதிய வேளையில் விடுதியின் தண்ணீர் தொட்டியில் சடலம் ஒன்று தெரிவதாக மாணவிகள் காப்பாளரிடம் தெரிவித்ததின் பேரில் உடனே காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், தண்ணீர் தொட்டியில் கிடந்த சடலத்தை மீட்டுள்ளனர். இதனையடுத்து உயிரிழந்து கிடந்தது மாணவி ஏஞ்சல்புஷ்பா என தெரியவந்தது. 

இதனையடுத்து பிரேத பரிசோதணைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பட்டபகலில் அரசு கலைக்கல்லூரி மாணவி மர்மமான முறையில் விடுதி தண்ணீர் தொட்டியில் உயிரிழந்த சம்பவம் கல்லூரி மாணவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval