Monday, December 9, 2013

சென்னை விமான நிலையத்தில் கொலை வழக்கில் தலைமறைவான அதிரை வாலிபர் பிடிபட்டார்

ஆலந்தூர், டிச.10- 
சென்னை விமான நிலையத்தில் கொலை வழக்கில் தலைமறைவான வாலிபர் பிடிபட்டார்

சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளை குடியுரிமை அதிகாரிகள் சோதனையிட்டனர். 

அப்போது தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி (வயது 33) என்பவர் வந்தார். அவரது பாஸ்போர்ட்டை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 

அப்போது கடந்த 2004-ம் ஆண்டு நிகழ்ந்த அடிதடி மற்றும் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதை குடியுரிமை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். உடனே அவரை பிடித்து விமான நிலைய தனியறையில் வைத்தனர். 

இதுகுறித்து தஞ்சை மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வந்து பார்த்தசாரதியை அழைத்துச் செல்வார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். 
courtesy .Malailalar


No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval