Saturday, August 31, 2013

நோயின் அறிகுறிகளும் ஆலோசனையும்


சளியோடு இரத்தம் வெளியேறுதல்

இருமும் போது சளியுடன் இரத்தம் வெளியேறுதல் பல நோய்களால் ஏற்படலாம்.சளியுடன் ரத்தம் வெளியேறுதல் மருத்துவ ரீதியாக ஹீமொப்டிசிஸ் (Hemoptysis) எனப்படும்.அவ்வாறான நோய்கள் நியுமோனியா மற்றும் சுவாசப்பைக் கிருமித் தொற்றுக்கள்காசநோய் (T.B)சுவாசப்பை புற்று நோய்கள் இவை தவீர இன்னும் ஏராளமான அரிதான நோய்கள் இருக்கின்றன. ஆனாலும் சளியுடன் ரத்தம் வெளியேறும் ஒருவருக்கு மேலே சொன்ன நோய்களில் எதுவும் இல்லை என்பது உறுதிப் படுத்தப்பட வேண்டும். ஆகவே உங்களுக்கு ஒருதடவையேனும் சிறிதளவான அளவு இரத்தம் சளியோடு வெளியேறினால்  கூட உடனடியாக வைத்தியரிடம் செல்ல வேண்டியது அவசியமாகும். 

பித்தப் பைக்கற்கள் (Gallstone)

பித்தப் பை (Gall bladar)எனப்படுவது எமது உடலிலே பித்தத்தை(bile) தற்காலிகமாக சேகரிக்கும் உறுப்பாகும்.இவ்வாறு பித்தைப்பையிலே சேகரிக்கப்படும் பித்தமானது ஒரு குழாய் மூலம் சிறுகுடலை வந்தடைந்துஉணவு சமீபாட்டிற்கு உதவும்.பித்தத்தில் உள்ள சில பதார்த்தங்களின் சேர்க்கையால் கற்கள் உருவாகலாம்.இவை பொதுவாக பித்தப் பைக் கற்கள் எனப்படும்.இந்தக் கற்கள் பித்தப் பையினுள்ளே காணப்படலாம் அல்லது பித்தக் குழாயினுள்ளே (பித்தத்தைபித்தப் பையிலிருந்து சிறுகுடலுக்கு கொண்டு சேர்க்கும் குழாயினுள்ளே) காணப்படலாம்.பித்தப் பைக் கற்கள் ஏற்படும் சந்தர்ப்பத்தை அதிகமாக கொண்டவர்கள்.பெண்கள் உடற் பருமனானவர்கள் நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் பித்தப் பைக் கற்கள் உள்ள எல்லோரிலும் அவை பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

அதாவது பித்தப் பைக் கற்கள் உள்ளவர்களில் சில பேரிலே அது பாதிப்பை ஏற்படுத்த மற்றவர்கள் வாழ்க்கை முழுவதும் சாதாரணமானவர்களாக இருப்பார்கள்.பித்தப் பைக் கற்கள் ஏற்படுத்தக் கூடிய பாதிப்புக்கள்...
பித்தப்பைக் கிருமித் தோற்று பித்தக் குழாய் அடைப்பு சதையி அலர்ச்சி இந்தக் கற்கள் ஏற்படுத்தும் பாதிப்பின் தன்மையைப் பொறுத்து அவற்றினால்ஏற்படும் பாதிப்புக்களும் வேறுபடலாம்.பித்தப் பைக் கற்களினால் ஏற்படும் வலியானது வயிற்றின் வலது பக்க மேல் மூலையில் ஏற்படும். இந்த வலியானது தோற்பகுதிக்கு பரவிச் செல்லுவது போன்ற உணர்வினையும் ஏற்படுத்தும்.பித்தப் பைக் கிருமித் தோற்று ஏற்பட்டவர்களில் காய்ச்சலும் ஏற்படும். பித்தப் பைக் குழாயில் பூரணமான அடைப்பு ஏற்பட்டவர்களுக்கு பித்தப் பொருளான பிலிரூபின் (bilirubin) அதிகரித்து யோண்டீஸ் (jaundice)கண் மற்றும் உடல் மஞ்சள் ஆகும் என்ற நிலையம் ஏற்படும்.மருத்துவம்பித்தப் பைக் கற்கள் உள்ள எல்லோருக்கும் மருத்துவம் தேவைப்படுவதில்லை.

வலி அல்லது வேறு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாதவர்களுக்கு எந்தவிதமானமருத்துவமும் தேவை இல்லை.பித்தப் பை கிருமித் தொற்று, அல்லது மீண்டும் மீண்டும் வலி ஏற்படுபவர்களுக்குபித்தப் பைக் கற்கள் அகற்றப்பட வேண்டும். இதற்கான சத்திர சிகிச்சையின் போதுகற்களோடு சேர்த்து பித்தப் பையும் அகற்றப்படும்.பித்தப் பைக் குழாயின் கீழ்ப் பகுதியில் கல் உள்ளவர்களுக்கு நேரடியாக கல் மட்டுமே அகற்றப்படலாம் . இது வாய் வழியின் ஊடாக கமராவுடன் கூடிய ஒரு குழாயினை செலுத்தி செய்யப்படலாம்.பித்தப் பை அகற்றபடும் சத்திர சிகிச்சையானது இப்போது வயிற்றை வெட்டாமல் சிறிய துளை ஏற்படுத்தி செய்யப்படும் லப்பிரஸ்கோபி (Laparascopy) மூலம் இலகுவாக செய்யப்படலாம். பித்தைப்பை அகற்றப்பட்ட பின்பு  கூட ஒருவர் எந்தப் பாதிப்பும் இல்லமால் சாதரணமாக வாழலாம்.

ஒருவருக்கு எந்தச் சந்தர்ப்பங்களில் எயிட்ஸ் தொற்றலாம்

எயிட்ஸ் எனப்படும் நோய் பற்றி எல்லோரும் அறிந்துதான் இருப்பீர்கள். இருந்தாலும் இது தொற்றக் கூடிய சந்தர்ப்பங்கள் பற்றி தெளிவாக இல்லாதததால் பல பேர் தங்களுக்கும் எயிட்ஸ் தொற்றி இருக்குமோ என்ற அச்சத்தில் உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள்.அவ்வாறான சந்தேகங்களை களைவதற்கே இந்த விளக்கம்.எயிட்ஸ் நோயினை ஏற்படுத்தும் வைரஸ் இரத்தம் மற்றும் உடலில் இருந்து வெளியேறும் சில திரவங்களின் நேரடித் தொடர்பினால் மட்டுமே தொற்றும். அதுதவீர சுவாசத்தின் மூலமோ உணவின் மூலமோ இந்த நோய் தொற்றுவதில்லை.

அதாவது எயிட்ஸ் தொற்றக் கூடிய சந்தர்ப்பங்கள்உடலுறவின் போது- நோயுள்ள ஒருவரோடு உடலுறவில் ஈடுபடும் போது இது தொற்றலாம். இது ஆண் பெண் தொடர்பு , அல்லது ஓரினச் சேர்க்கை என எந்தவிதமான உறவிலும் ஏற்படலாம்.அதேபோல் யோனி வழி ,குதவழி என எந்தவிதமான உறவின் போதும் தொற்றலாம்.கொண்டம்(ஆணுறை) பாவிப்பது இவ்வாறு நோய் தொற்றுவதைத் குறைக்கும். 

எனினும் கொண்டம்(ஆணுறை) நூறு வீதம் பாதுகாப்பை அளிப்பதில்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.உங்களுக்கு நம்பகமான , எயிட்ஸ் நோய் இல்லாத ஒருவரோடு உடலுறவில் ஈடு படும் போது எயிட்ஸ் ஏற்படாது.அடுத்தததாக நோயுள்ள ஒருவர் பாவித்த ஊசி ,பிளேட் ,சவரக் கத்தி போன்றவற்றை பாவிக்கும் போது. அதாவது இவ்வாறான கூரான உபகரணங்கள் மூலம் நோயுள்ளவரின் இரத்தம் நோயற்றவர்களின் இரத்தத்தோடு தொடர்பு படக்கூடிய சந்தர்ப்பம் இருப்பதால் எயிட்ஸ் தொற்றலாம்.

இந்த உபகரணங்கள் நோயாளியில் சிறிய காயத்தை ஏற்படுத்தி பின்பு நோய் இல்லதவரில் காயத்தை ஏற்படுத்தும் போது இரத்தம் தொடர்பு படலாம்.இதைத் தடுப்பதற்ழங்கப்பட்டாலும் எயிட்ஸ் தொற்றலாம்.மேலும் நோயுள்ள ஒரு தாய் ,நோய் இல்லாத கு தனித்தனியே சவரக் கத்தி பிளேட் என்பவற்றை பாவிக்க வேண்டும். சலூனுக்கு செல்லும் போது உங்களுக்கென தனியாக புது பிளேட் பயன் படுத்துகிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இது தவீர நோயாளியின் குருதி தவறுதலாக நோய் இல்லாதவருக்கு வகுழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலமும் எயிட்ஸ் தொற்றலாம்.

தகவல்: S.அஹமத் பாஸினியா, லண்டன், U .K  

1 comment:

  1. நல்ல பயனுள்ள தகவல்கள். தொடர்ந்து இது போன்ற தகவல்களை தந்துக் கொண்டிருக்கவும்.

    ReplyDelete

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval