Thursday, November 21, 2013

இஸ்லாமியர்களுக்கு மட்டுமே நிதி உதவி: அறிவிப்பை திரும்பபெற வேண்டும் உ.பி. அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு


புதுடெல்லி,
உத்தரபிரதேச மாநிலம் ஷாமலி மாவட்டம் முசாபர்நகரில் இருமதத்தினருக்கு இடையே கலவரம் மூண்டது. இந்த கலவரத்தில் 60 பேர் கொல்லப்பட்டனர். 40 ஆயிரம் குடும்பங்கள் சொந்த இடங்களைவிட்டு பாதுகாப்பு கருதி இடம்பெயர்ந்தனர். இந்நிலையில் உத்தரபிரதேச அரசு கலவரத்தில் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களுக்கு மட்டுமே நிதி உதவி என்று அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், இதனை திரும்ப பெற வேண்டும் என்று உத்தரபிரதேச அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
உத்தரவை ஏற்றுக் கொண்ட உத்தரபிரதேச அரசு அறிவிப்பை திரும்ப பெற்றுள்ளது. கலவரத்தில் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்கள் மற்றொரு பகுதியில் குடியேறுவதற்கு குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று உத்தரபிரதேச அரசு அறிவித்திருந்தது.
நன்றி ;தினத் தந்தி 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval