Wednesday, February 19, 2014

தமிழ்ப் பழமொழிகள் - PART 2


•  அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
•  அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
•  அகல உழுகிறதை விட ஆழ உழு.
•  அகல் வட்டம் பகல் மழை.
•  அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.
•  அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
•  அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.
•  அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
•  அடக்கமே பெண்ணுக்கு அழகு.
•  அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
•  அடாது செய்தவன் படாது படுவான்.
•  அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.
•  அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.
•  அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்.
•  அடியாத மாடு படியாது.
•  அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.
•  அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.
•  அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.
•  அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.
•  அந்தி மழை அழுதாலும் விடாது.
•  அப்பன் அருமை மாண்டால் தெரியும்.
•  அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.
•  அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம்.
•  அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.
•  அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.
•  அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.
•  அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
•  அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.
•  அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்
•  அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.
•  அளக்கிற நாழி அகவிலை அறியுமா?
•  அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
•  அறச் செட்டு முழு நட்டம்.
•  அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.
•  அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்கப் பாயில்லை.
•  அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.
•  அறமுறுக்கினால் அற்றும் போகும்.
•  அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.
•  அறிய அறியக் கெடுவார் உண்டா?
•  அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.
•  அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.
•  அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.
•  அறிவு இல்லார்தமக்கு ஆண்மையுமில்லை.
•  அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.
•  அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கித்தான் தியாகம் வாங்கவேண்டும்.
•  அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.
•  அற்ப அறிவு அல்லற் கிடம்.
•  அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.
•  அன்று எழுதியவன் அழித்து எழுதுவானா?
•  அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம்.
•  அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.
•  அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?

Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - ஆ

•  ஆக்கப் பொறுத்தவர் ஆறப் பொறுப்பதில்லை.
•  ஆடையில்லாதவன் அரை மனிதன்.
•  ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
•  ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.
•  ஆரால் கேடு, வாயால் கேடு.
•  ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
•  ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.
•  ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைபபூ சக்கரை.
•  ஆழமறியாமல் காலை இடாதே.
•  ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.
•  ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.
•  ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.
•  ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.
•  ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
•  ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?
•  ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
•  ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்
•  ஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.
•  ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.
•  ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.
•  ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
•  ஆனைக்கும் அடிசறுக்கும்.
•  ஆனை படுத்தால் ஆள் மட்டம்.    
•  ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே.

 தகவல் N.K.M. புரோஜ்கான் 
 அதிரை  

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval