Tuesday, February 25, 2014

- தமிழ்ப் பழமொழிகள் PART 3

Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - இ, ஈ

•  இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.
•  இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.
•  இஞ்சி இலாபம் மஞ்சளில்.
•  இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
•  இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாலைக்கு.
•  இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.
•  இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.
•  இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
•  இரக்கப் போனாலும் சிறக்கப் போ.
•  இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.
•  இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.
•  இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை; இராச திசையில் கெட்டவணுமில்லை.
•  இராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான்.
•  இரும்படிக்கும் இடத்தில் ஈக்கென்ன வேலை?
•  இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.
•  இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்.
•  இருவர் நட்பு ஒருவர் பொறை.
•  இல்லாது பிறாவது அள்ளாது குறையாது.
•  இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?
•  இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.
•  இளங்கன்று பயமறியாது.
•  இளமையில் கல்.
•  இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.
•  இளமையில் கல்வி சிலையில் எழுத்து.
•  இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.
•  இறங்கு பொழுதில் மருந்து குடி.
•  இறுகினால் களி , இளகினால் கூழ்.
•  இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.
•  இறைக்கிற ஊற்றே சுரக்கும்.
•  இனம் இனத்தோடே, வெள்ளாடு தன்னோடே.
•  இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான்.
•  ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்.
•  ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.
•  ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.
•  ஈர நாவிற்கு எலும்பில்லை.

Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - உ, ஊ

•  உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.
•  உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும்.
•  உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா.
•  உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.
•  உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?
•  உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.
•  உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.
•  உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்காதே.
•  உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல்.
•  உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.
•  உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.
•  உண்ணீர் உண்ணீரென்றே ஊட்டாதார் தம் மனையில் உண்ணாமை கோடி பெறும்.
•  உதட்டில் உறவு உள்ளத்தில் பகை.
•  உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.
•  உப்பிட்டவரை உள்ளளவும் நினை.
•  உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?
•  உயிர் காப்பான் தோழன்.
•  உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?
•  உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.
•  உலோபிக்கு இரட்டை செலவு.
•  உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
•  உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.
•  உளவு இல்லாமல் களவு இல்லை.
•  உள்ளது சொல்ல ஊரு மல்ல நல்லது சொல்ல நாடுமல்ல
•  உள்ளது போகாது இல்லது வாராது.
•  உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய.
•  உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்?
•  உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது.
•  ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.
•  ஊணுக்கு முந்துவான் வேலைக்குப் பிந்துவான்.
•  ஊண் அற்றபோது உடலற்றது.
•  ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.
•  ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.
•  ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்
•  ஊருடன் ஒட்டி வாழ்.
•  ஊருடன் பகைக்கின் வேறுடன் கெடும்.
•  ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடேல்.

Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - எ, ஏ

•  எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு.
•  எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?
•  எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.
•  எட்டாக் கனிக்குக் கொட்டாவி விடாதே.
•  எட்டி பழுத்தென்ன, ஈயார் வாழ்த்தென்ன?
•  எண் இல்லாதவர் கண் இல்லாதவர்,
•  எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.
•  எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்.
•  எண்ணிச் செய்கிறவன் கெட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.
•  எண்ணிச்செய்வது செட்டு, எண்ணாமல் செய்வது வேளாண்மை.
•  எண்ணை முந்துதோ திரி முந்துதோ?
•  எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.
•  எதார்த்தவாதி வெகுசன விரோதி.
•  எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.
•  எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும்.
•  எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?
•  எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம்.
•  எந்நிலத்து வித்திடுனும் காஞ்சிரங்காய் தெங்காகா.
•  எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ?
•  எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
•  எரிகிற விளக்கானாலும் தூண்டுகோல் வேண்டும்.
•  எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம்.
•  எரியும் கொள்ளிகளில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?
•  எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.
•  எருது நோய் காக்கைக்குத் தெரியுமா?
•  எலி அழுதால் பூனை விடுமா?
•  எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.
•  எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்
•  எலி வளையானாலும் தனி வலை வேண்டும்.
•  எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?
•  எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் தூக்குகிறவர் யார்?
•  எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?
•  எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான்.
•  எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
•  எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி.
•  எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்.
•  எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.
•  எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்.
•  எள்ளூ என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருகிறான்.
•  எள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு.
•  எறும்பு ஊர கல்லுந் தேயும்.
•  எறும்புந் தன் கையால் எண் சாண்.
•  ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.
•  ஏதென்று கேட்பாருமில்லை, எடுத்துப் பிடிப்பாருமில்லை.
•  ஏரி நிறைந்தால் கரை கசியும்.
•  ஏருழுகிறவன் இளப்பமானால், எருது மச்சான் முறை கொண்டாடும்.
•  ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம்.
•  ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை.
•  ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஓக்கும்.
•  ஏழைபேச்சு அம்பலம் ஏறாது.
•  ஏறச் சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்.

Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - ஐ, ஒ, ஓ, ஒள

•  ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகாதாம் பேய்ச்சுரைக்காய்க்கு.
•  ஐந்திலே வளையாதது, ஐம்பதிலே வளையுமா?
•  ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்.
•  ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?
•  ஒரு காசு பேணின் இரு காசு தேறும்.
•  ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்.
•  ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?
•  ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா?
•  ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை.
•  ஒரு நாள் கூத்துக்கு மீசையை எடுக்கவா?
•  ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
•  ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்.
•  ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்.
•  ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.
•  ஒருவனாய்ப் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.
•  ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று.
•  ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா!
•  ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.
•  ஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம்.
•  ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் குரு, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.
•  ஓடும் நாயைக் கண்டால் துரத்தும் நாய்க்கு இளக்காரம்.
•  ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.
•  ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.
•  ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.
•  ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே.
•  ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி.
•  ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு.
•  ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை.
   
   தகவல் ;N.K.M.புரோஜ்கான் 
    அதிரை  

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval