இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
Wednesday, November 18, 2015
விஷப்பெட்டியாக மாறிவிட்ட ஃப்ரிட்ஜ்!
ஷாக்கிங் தகவல்கள்… சமாளிக்க 10 கட்டளைகள்!அவேர்னஸ் ‘‘குளிர்சாதனப்பெட்டி (Refrigerator) என்பது இன்று எல்லா இல்லங்களிலும் அத்தியாவசியப் பொருளாகிவிட்டது. ஆனால், பலருக்கும் தெரியாது அதில் பொதிந்துள்ள ஆபத்துகள் பற்றி!’’ என்று அதிர்ச்சி கொடுக்கும் சென்னை, இ.எஸ்.ஐ மருத்துவமனையின் ஊட்டச்சத்து நிபுணர் பவானி, குளிர்சாதனப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதன் நோக்கம் தொடங்கி, அதன் பயன்பாடு திசைதிரும்பியதால் அதிகரித்துள்ள உடல்நலப் பிரச்னைகள், ஃப்ரிட்ஜுக்கான மாற்றுவழி வரை விரிவாகப் பேசுகிறார்…
Tuesday, November 17, 2015
அஞ்சவைக்கும் ஒரு சமாசாரம்... எண்ணெய்!

ஆறாம் திணை - மருத்துவர் கு.சிவராமன்
இந்தியாவின் முக்கால்வாசி மரணங்களுக்கு, சர்க்கரை நோய், புற்றுநோய், இதயநோய் உள்ளிட்ட தொற்றாநோய்க் கூட்டம் காரணமான பிறகு, உணவில் எல்லோரையும் அஞ்சவைக்கும் ஒரு சமாசாரம்... எண்ணெய்!
''மொதல்ல நம்மளோட நல்லெண்ணெய் - தேங்காய் எண்ணெய் எல்லாம் கொழுப்புனு சொன்னாங்க. அப்புறம் ரீஃபைண்டு பண்ண ஆயில் நல்லதுன்னு சொன்னாங்க. அடுத்து, சன்ஃப்ளவர் ஆயிலுக்கு மாறச் சொன்னாங்க. அப்புறம், தவிட்டு எண்ணெய். இப்போ ஐரோப்பாவில் இருந்து வரும் ஆலிவ் ஆயில். எது டாக்டர் சரியான எண்ணெய்?'' - இந்தக் கேள்வியைக் கேட்காதவர்கள் இல்லை.
இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்:-
1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!
2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.
3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.
4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.
Monday, November 16, 2015
Sunday, November 15, 2015
அடையாள அட்டையில்லாமல் ஐகோர்ட்டில் இன்று முதல் யாரும் நுழைய முடியாது
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் இன்று முதல், அடையாள அட்டை இல்லாமல் யாரும் நுழைய முடியாது. ‘சென்னை உயர் நீதிமன்ற பாதுகாப்பை, சி.ஐ.எஸ்.எப்., எனப்படும், மத்திய தொழில் பாதுகாப்பு படை மேற்கொள்ள வேண்டும்’ என, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சிவஞானம் அடங்கிய முதல் அமர்வு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
Saturday, November 14, 2015
ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு சமையல் கியாஸ் மானியத்தை நிறுத்த மத்திய அரசு திட்டம்
ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு சமையல் கியாஸ் மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக மந்திரி வெங்கையா நாயுடு கூறினார்.
வெங்கையா நாயுடு பேச்சு
ஐதராபாத் நகரில் ஆந்திரா–தெலுங்கானா வர்த்தக சபை நேற்று ஏற்பாடு செய்து இருந்த விருது வழங்கும் விழாவில் மத்திய நகர்ப்புற வளர்ச்சி மற்றும் பாராளுமன்ற விவகார துறை மந்திரி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு பேசினார்.
புறம்பேசுதல் நல்ல பழக்கமாகுமா.!?
அதாவது அடுத்தவன் குறைகாண்பவன் அரை
மனிதன் தன்குறை உணர்பவன் முழுமனிதன் என்று ஒரு பழமொழி சொல்வார்கள்
இப்பழமொழி பெரும்பாலும் புறம்பேசும் மனிதர்களுக்கே மிகப் பொருத்தமானதாக
இருக்கும் என்று நினைக்கிறேன். காரணம் இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு
மனிதனிடத்திலும் ஏதாவது ஒரு ரீதியில் குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும்.
அப்படிப்பார்க்கும்போது தன்னிடத்தில் பல குறைகளையும் வைத்துக்கொண்டு
அடுத்தவர்களின் குறைகளை அடுத்தவர்களின் பிரச்சனைகளை, அடுத்தவர்களின்
போக்குகளை ஆராய்ந்து அதைப்பற்றி புறம்பேசுவது என்பது எப்படி நல்ல பழக்கமாக
இருக்கமுடியும்.?Friday, November 13, 2015
மருத்துவ கொள்ளையர்களை அடையாளம் காணுமா இந்த தமிழக அரசு
உண்மை இரண்டு நிமிடம் படியுங்கள் கத்தி படத்தை 200 ருபாய் கொடுத்து பார்க்கும் மகராசனுங்கலே இந்த மருத்துவ கொளையர்களை பற்றியும் சிறிது அறிந்து கொள்ளுங்கள் பகிர்ந்து கொள்ளுங்கள் இதற்காக நான் கடந்த 6 வருடமாக அனைத்து விபசார ஊடகங்களையும் அணுகி கேவலப்பட்டு அசிங்கப்பட்டும் ஏழை மக்களின் உயிர் காக்க போராடி கொண்டு உள்ளேன் இந்த பல்லடம் சிவகுருநாதன் 9952432752 தயவு கூர்ந்து அனைவரும் பகிருங்கள் உங்களை நான் பணம் கேட்கவில்லை பகிரத்தான் வேண்டுகிறான் ...
மருத்துவ கொள்ளையர்களை அடையாளம் காணுமா இந்த தமிழக அரசு
Subscribe to:
Posts (Atom)