Sunday, October 19, 2014

எச்சரிக்கை அறிவிப்பு:-


Image result for child kidnap imagesஅஸ்ஸலாமு அழைக்கும்..
  உங்கள் குடும்பத்தில் நடப்பதற்கு முன் உங்கள் பிள்ளைகளை பாதுகாத்து கொள்ளுங்கள்..

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே முக்கிய வேண்டுக்கோள்...
தமிழகத்தில் தற்ப்போது புதிதாக ஆரம்பிக்கப்பட்டு இருக்கும் தொழில் “புள்ளைபிடிப்பது” கடந்த சில தினங்களாக கேள்வி பட்டு வருகிறோம்,
((எனக்கு என்னா எங்கேயோ நடக்கிறது என்று சில பல பேர் இருப்பார்கள்)) ((நமக்கு வந்தால் தான் தெரியும் அதோட வழி)) 
((பள்ளி விடுமுறை நாட்களில் பிள்ளைகள் வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருப்பார்கள்)).
பிள்ளையை பத்து மாதம் சுமந்து பெற்ற தாய்மார்கள் விடுமுறை நாட்களில் பிள்ளைகள் வீட்டில் இருந்தால் நமக்கு தொலைகாட்சி பார்க்க பிரச்சனையாக இருக்கிறது என்று வெளியே விளையாட போக சொல்லிவிட்டு நிம்மதியாக தொலைகாட்சி நிகழ்ச்சியில் மூல்கிவிடுவார்கள், வெளியே விளையாட சென்ற பிள்ளை எங்கு விளையாடுகிரான் எப்போ விளையாட போனான் என்ன செய்கிறான் என்பதையெல்லாம் கவனிப்பது கிடையாது.
இரண்டு தினக்களுக்கு முன் எனது ஊரில் மதியம் 2 மணி இருக்கும் வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்த ஒரு பையனை ஒரு கும்பல் எதையோ காட்டி காரில் ஏற்றி இருக்கிறது, சுதாரித்து கொண்ட சிறுவன் அந்த கும்பலிடம் இருந்து தப்பித்து வீட்டிற்க்கு ஓடி நடந்ததை சொல்லி இருக்கிறன்.
கூச்சல் கும்மாலத்துடன் வெளியே ஓடி வந்த தாயார் அங்கு பார்க்கும் பொது அந்த கார் பஞ்சாய் பரந்து விட்டது, மதிய நேரம் என்பதால் அந்த நேரத்தில் காரை விரட்டி பிடிக்க அந்த இடத்தில் யாரும் இல்லை.
பின்னர் அந்த சிறுவனிடம் நடந்ததை கேட்ட போது, அதை கேட்ட அங்கு கூடி இருந்தவர்களுக்கு மூளையே வெடித்து விடும் போல் இருந்தது. அப்படி அந்த சிறுவன் என்ன சொன்னான்.
அந்த சிறுவன் காருக்குள் கண்ட காட்சி இன்னும் இரண்டு பெண் குழந்தைகள் அந்த காருக்குள் இருந்தார்கள் என்று சொல்லி இருக்கிறான் ((யார் வீட்டு பிள்ளைகளோ அல்லாஹ் காப்பாற்றுவானாக)).
((இந்த சம்பவம் நாகை மாவட்டம் வாணாதிராஜபுரம் என்ற கிராமத்தில் நடந்தது)) இந்த செய்தி வெளிநாட்டில் இருக்கும் எனக்கு கிடைத்தது, அப்போது எனக்கு நினைவுக்கு வந்தது சில தினங்களுக்கு முன் தஞ்சை மாவட்டத்தில் எதோ ஒரு ஊரில் கோயில் திருவிழாவில் இது போன்ற சம்பவம் நடந்ததாக தொலைகாட்சியில் வந்த செய்தி நினைவுக்கு வந்தது. உடனடியாக எல்லோருக்கும் தெரியபடுத்த வேண்டும் என்று இந்த நிகழ்வை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், முடிந்தவரை உங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்துக்கு வீட்டுக்காரர்களுக்கு இந்த செய்தியை உடனடியாக தெரியபடுத்தி நமது மற்றும் நமது உடன் பிரவா சகோதர சகோதரி பிள்ளைகளை பாதுகாத்துக்கொள்ள முயற்ச்சிக்கவும்..
குறிப்பு: இந்த சம்பவம் நடந்த இடம் மெயின் ரோட்டுக்கு உள்ளே உள்ள ஒரு தெருவில், அந்த தெருவில் இருந்து மெயின் ரோட்டை பிடிக்க குறுக்கும் முருக்குமாக பல வழிகள் உள்ளது, வெளி ஊரில் இருந்து புதிதாக வருவபர்களுக்கு எந்த தெருவில் போனால் மெயின் ரோட்டை பிடிக்கலாம் என்று புதிதாக வருவபர்களுக்கு புரிவது கொஞ்சம் கஷ்ட்டம், நடந்ததை பார்க்கும்போது இதன் பின்னால் இந்த ஊரில் உள்ள ஏதோ ஒரு நாதாரி இருந்து இருக்க வேண்டும் என்று எனக்கு தோனுகிறது. 
(என்னுடைய சிறு வயதில் கேள்வி பட்டு இருக்கேன்: பிள்ளைபிடிக்கிரவன் பிள்ளிகளைபிடித்து சென்று கை கால்கலை முடமாக்கி கண்ணை குருடாக்கி பிச்சை எடுக்க வைப்பான் என்று, அது அந்த காலம்)
ஆனால் இன்றைய நவீன காலத்தில் ஒரு பிள்ளையை கடத்தினால் பல மாதங்கள் உட்கார்ந்து திங்கலாம், ஒவ்வொரு உறுப்பையும் விற்று பல லட்சம் சம்பாதிக்கிரார்கள், இலகுவாக சம்பாதிக்க இந்த வழி அந்த மனித மிருகங்களுக்கு உதவுகிறது.
இதன் பின்னல் ஒரு கும்பலே இருக்கும் என்று தெரிகிறது.
ஊருக்கு உள்ளே அல்லது வெளியே தெரியாத முகம் காருடன் நின்றால் என்னா ஏது என்று விசாரிக்கவும், சந்தேகம் வருவது போல் இருந்தால் பிடித்து போலீசில் ஒப்படைக்கவும்
அன்புடன்..
ஜமால் முகம்மது
U.A.E.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval