Wednesday, October 8, 2014

ரச்சேல் – பாலஸ்தீனத்தில் தியாகியான அமெரிக்க மாணவி

ரச்சேல் கோரி
ஒருவேளை ஒரு பாலஸ்தீனச் சிறுவன் அமெரிக்கா எனும் என்னுடைய உலகத்தை நேரில் வந்து பார்த்தால் அந்தப் பிஞ்சு மனம் எப்படித் துடிக்கும்”

ஃபீதாயின் ரச்சேல்

மெரிக்க இராணுவம் வானத்திலிருந்து ஈராக் மக்களைப் படுகொலை செய்யத் தொடங்குவதற்கு நான்கு நாட்கள் முன், அந்தக் கோழைத் தனத்தை நிராகரிக்கும் வீரமாக, அந்த ஆக்கிரமிப்புக்கு எதிரான தோழமையாக, பாலஸ்தீன மண்ணில் ரத்தம் சிந்தினாள் ஒரு கல்லூரி மாணவி.
மார்ச் 16. பாலஸ்தீன மக்களின் தாயகத்தை ஆக்கிரமிக்கும் யூதவெறி பிடித்த இசுரேல் இராணுவத்தின் புல்டோசர், ரச்சேல் கோரி என்ற அந்த வீராங்கனையின் மீது ஏறி இறங்கியது.

rachel-corrie-6rachel-corrie-5புல்டோசரை எதிர்கொள்ளும் ரச்சேல்
இதே மாதிரியான புல்டோசர் ரச்சேலைக் கொன்றது
rachel-corrie-8
தலை பிளக்கப்பட்டு...
புல்டோசரை எதிர்கொள்ளும் ரச்சேல்
rachelCorrierachel-corrie-7
தலை பிளக்கப்பட்டு…
இதே மாதிரியான புல்டோசர் ரச்சேலைக் கொன்றது


[படங்களைப் பெரிதாகப் பார்க்க  அவற்றின் மீது சொடுக்கவும்]
ரச்சேல், சர்வதேச ஒற்றுமை இயக்கம் என்ற அமைப்பின் உறுப்பினர். பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கும் இசுரேல் அரசையும் அதற்குத் துணை நிற்கும் அமெரிக்காவையும் எதிர்த்துப் போராடும் இந்த அமைப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் அமெரிக்க பிரிட்டிஷ் இளைஞர்கள்.
ரச்சேல் கோரிரச்சேல், சர்வதேச ஒற்றுமை இயக்கம் என்ற அமைப்பின் உறுப்பினர்
ரச்சேல் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி. “பயங்கரவாதத்துக்கெதிரான போர்” என்ற பெயரில் அமெரிக்கா நடத்தி வரும் இராணுவ வெறியாட்டங்களை எதிர்த்துப் போராடுவதில் அவள் முன்னணியில் நின்றதாக ரச்சேலை நினைவு கூர்கிறார்கள் அவளது ஆசிரியர்கள்.
குறிப்பாக பாலஸ்தீன மக்களின் துயரத்தைத் தன் சொந்தத் துயரமாகவே கருதினாள் ரச்சேல். ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமிக்கும் தருணத்தில் உலகின் கவனம் அங்கே திரும்பியிருக்கும் போது, பாலஸ்தீனத்தை இசுரேல் விழுங்கி விடும் என்று அவள் அஞ்சினாள்.
ரச்சேல் கோரிரச்சேலும் அமெரிக்க பிரிட்டிஷ் இளைஞர்கள் ஏழு பேரும் பாலஸ்தீனத்திற்கு வந்து விட்டனர்.
அதைத் தடுப்பது தம் கடமை என்று கருதிய ரச்சேலும் அமெரிக்க பிரிட்டிஷ் இளைஞர்கள் ஏழு பேரும் இரண்டு மாதங்களுக்கு முன்பே பாலஸ்தீனத்திற்கு வந்து விட்டனர். பாலஸ்தீனத்தில் இசுரேல் அன்றாடம் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் காசா பகுதியில், ரஃபா எனும் சிறு நகரில் பாலஸ்தீன ஏழை மக்களின் குடும்பங்களுடன் சேர்ந்து வாழ்ந்தது அந்த இளைஞர் குழு.
திடீர் திடீரென இசுரேலிய இராணுவத்தின் புல்டோசர்கள் வருவதும் அவற்றை மறித்து நின்று போராடுவதும் ரச்சேல் குழுவினரின் அன்றாட நடவடிக்கையாகி விட்டது. அத்தகைய சம்பவம் ஒன்றினைத் தனது பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில் விவரிக்கிறாள் ரச்சேல்.
“நாங்கள் புல்டோசரை மறித்து நின்றோம். மண்வாரியில் எங்களை அள்ளி வீசினான் ஓட்டுனர். நாங்கள் வீட்டின் ஒரு முனையில் கிடந்தோம். மறுபாதியை இடித்துத் தள்ளியது புல்டோசர்.”
மார்ச் 16-ம் தேதி நடந்ததும் அதுதான். வெறியுடன் வந்து கொண்டிருந்தது இராணுவத்தின் புல்டோசர். அதன் பாதையில் மண்டியிட்டு அமர்ந்திருந்தாள் ரச்சேல். “நிறுத்து…நிறுத்து” என்று ரச்சேலின் தோழர்கள் கத்தினார்கள். பயனில்லை. ரச்சேலின் தலையைப் பிளந்தபின்தான் அது நின்றது.
“நிராயுதபாணிகளான பாலஸ்தீன மக்களைச் சுட்டுத் தள்ளுகிறது இசுரேல் இராணுவம். ஆனால் நிராயுதபாணியான ஒரு அமெரிக்கக் குடிமகனைச் சுட்டுத் தள்ளும் தைரியம் அவர்களுக்கு இருக்குமா?” என்று தன் பெற்றோருக்கு எழுதிய கடிதமொன்றில் குறிப்பிடுகிறாள் ரச்சேல்.
ரச்சேல் கோரி தெருரச்சேல் கோரி தெரு (பாலஸ்தீனத்தின் ரமலா நகரில் ரச்சேல் பெயரில் தெரு)
பாசிஸ்டுகளை எடை போடத் தெரியாத அந்தப் பெண்ணின் வெகுளித்தனம் நம்மைக் கண்கலங்கச் செய்கிறது. வெள்ளைத் தோலானாலும், அமெரிக்கக் குடிமகனானாலும் தனது ஆதிக்கத்தை எதிர்த்து நிற்போர் யாரையும் பாசிஸ்டுகள் விட்டு வைப்பதில்லை என்ற உண்மை புரியும் தருணத்தில், புல்டோசரின் கொலைக்கரங்கள் அவளை நெருங்கிய அந்தத் தருணத்தில் ரச்சேல் ஓடவில்லை. மரணத்தின் தறுவாயில் தான் உணர்ந்து கொண்ட உண்மையை அமெரிக்க மக்கள் அனைவரும் உணர்ந்து கொள்ளட்டும் என்பதற்காக அவள் உயிர் விட்டாள்.
ரச்சேல் ஒரு மனிதாபிமானியா, வீராங்கனையா, தியாகியா, அல்லது போராளியா? அவள் ஒரு போராளி. ஃபிதாயீன்!
ஃபிதாயீன் என்ற அரபிச் சொல்லின் பொருள் தற்கொலைப்படை வீரன். பாலஸ்தீனத்தின் மீசை அரும்பாத இளைஞர்களும் இளம் பெண்களும் தம் உடலையே வெடிமருந்து கிடங்காக்கி வெடிக்கச் செய்து இசுரேலை நிலைகுலையச் செய்கிறார்கள். அவர்களுடைய இலக்கு யூதவெறி அரசு.
ரச்சேலின் இலக்கோ அமெரிக்க சமூகத்தின் அலட்சியம்; உலக மக்களின் மவுனம். வெடிமருந்துகளால் தகர்க்க முடியாத இந்த ‘எதிரியை’ முறியடிக்க அந்த அமெரிக்க மாணவி கண்டுபிடித்த அதி நவீன ஆயுதம் ரத்தம்.

“நாம் வாழும் வாழ்க்கை இந்தக் குழந்தைகளுக்குத் தெரிந்தால்…” -  ரச்சேலின் கடிதம்.

இசுரேல் இராணுவத்தால் கொல்லப்படுவதற்குச் சில நாட்கள் முன்னால் ரச்சேல் தன் பெற்றோர்களுக்கு எழுதிய கடிதத்திலிருந்து சில பகுதிகள் :
சிண்டி, கிரெய்க் கோரி2007-ம் ஆண்டு நடந்த “ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டு வா” ஆர்ப்பாட்டத்தில் ரச்சேலின் பெற்றோர். சிண்டி, கிரெய்க் கோரி
நான் பாலஸ்தீனத்துக்கு வந்து சரியாக இரண்டு வாரங்களும் ஒரு மணி நேரமும் ஆகி விட்டது. ஆனால் இங்கே நான் காண்பதை உங்களுக்கு விவரிக்க, அதாவது அமெரிக்காவுக்குப் புரிய வைக்க வார்த்தைகள் கிடைக்காமல் தவிக்கிறேன்.
குண்டுகளால் துளைக்கப்பட்ட வீட்டுச் சுவர்கள், கழுகுப் பார்வையால் கண்காணிக்கும் இராணுவம் – இவையிரண்டும் இல்லாத ஒரு வாழ்க்கையை இங்குள்ள குழந்தைகள் வாழ்ந்ததேயில்லை. இருப்பினும் “வாழ்க்கை என்பது எல்லா இடங்களிலும் இந்த மாதிரி இல்லை” என்பதை இங்குள்ள சின்னஞ்சிறு பிள்ளைகள் கூடப் புரிந்து வைத்திருக்கிறார்கள்.
நான் இங்கே வந்து இறங்குவதற்கு இரண்டு நாட்கள் முன் ஒரு 8 வயதுச் சிறுவனை இசுரேலிய இராணுவம் சுட்டுக் கொன்று விட்டது. “அவன் பெயர் அலி” என்று என்னிடம் கிசுகிசுக்கிறார்கள் இங்குள்ள குழந்தைகள். “ஷரோன் யாரு – புஷ் யாரு” என்று அரபியில் அவர்கள் கேட்க, “ஷரோன் கிறுக்கன் – புஷ் கிறுக்கன்” என்று நானும் எனக்குத் தெரிந்த அரபு மொழியில் பதில் சொல்கிறேன். அரபு மொழியை இப்படித்தான் எனக்குக் கற்றுத் தருகிறார்கள் இந்தச் சிறுவர்கள். உலக அரசியலின் அதிகாரம் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி நான் முன்னர் புரிந்து வைத்திருந்ததைக் காட்டிலும் இங்கே இருக்கும் 8 வயது வாண்டுகள் தெளிவாக அறிந்திருக்கிறார்கள்.
புத்தகங்கள், கருத்தரங்குகள், விவாதங்கள், செய்திப் படங்கள் போன்ற பல வழிகளில் பாலஸ்தீனத்தைப் பற்றி நான் சேகரித்த அறிவு அனைத்தையும் விஞ்சுகிறது இங்குள்ள எதார்த்தம். நேரில் பார்த்தாலொழிய நீங்கள் இதைப் புரிந்து கொள்ளவே முடியாது; ஒருவேளை நேரில் வந்து அனுபவித்தாலும் முழுமையாகப் புரிந்து விட்டதாக நான் சொல்லிக் கொள்ள முடியாது.
என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். இங்குள்ள கிணறுகளை இடித்தாலும் தண்ணீர் வாங்கிக் குடிக்க என்னிடம் பணம் இருக்கிறது; நினைத்தால் நான் உடனே அமெரிக்காவுக்குத் திரும்பி விடலாம்; என் குடும்பத்தினர் யாரையும் இராணுவம் ராக்கெட் வீசிக் கொன்றதில்லை; எனக்கொரு வீடு இருக்கிறது; நான் ஆற அமரக் கடலைக் கண்டு ரசித்திருக்கிறேன்; பள்ளிக் கூடத்திலிருந்து திரும்பும் வழியில் இராணுவத்தால் கொல்லப்படுவேனோ என்ற பயமின்றி சந்தோஷமாக நான் வீடு திரும்பியிருக்கிறேன்.
ஒலிம்பியா ஆர்ப்பாட்டம்அமெரிக்காவின் ஒலிம்பியா நகரில் அமைதி ஆர்ப்பாட்டம்
எனவேதான் இக்குழந்தைகள் வாழும் உலகத்திற்குள் கால் வைத்த மறுகணமே இந்தக் கொடூரங்களைக் கண்ணால் கண்ட மறுகணமே என் ரத்தம் கொதிக்கிறது. “ஒருவேளை ஒரு பாலஸ்தீனச் சிறுவன் அமெரிக்கா எனும் என்னுடைய உலகத்தை நேரில் வந்து பார்த்தால் அந்தப் பிஞ்சு மனம் எப்படித் துடிக்கும்” என்ற கேள்வி என்னை வாட்டுகிறது.
இவர்களைப் போலன்றி நான் வேறொரு வாழ்க்கையை வாழ்ந்து பார்த்திருக்கிறேன். அமைதியான இடத்தில் வசித்திருக்கிறேன். கிணற்றை இடித்து குடிக்கும் தண்ணீரை இராணுவம் பறித்து விடும் என்று நான் கற்பனையில் கூட அஞ்சியதில்லை; இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போது வீட்டின் சுவர்கள் உட்புறமாக இடித்துத் தள்ளப்பட்டு நான் பதறி விழித்ததில்லை; தனது சொந்தங்களை இராணுவத்திற்கு காவு கொடுத்த யாரையும் நான் அமெரிக்காவில் சந்தித்ததில்லை; என்னுடைய வீட்டை நாற்புறமும் இராணுவக் கோபுரங்கள் கொலைவெறியுடன் குறிபார்க்கவில்லை.
ஆனால், இந்த பாலஸ்தீனச் சிறுவர்களோ நாம் வாழும் அமைதியான வாழ்க்கையை அறிந்ததே இல்லை. நினைத்துப் பாருங்கள். உங்கள் குழந்தைப் பருவம் முழுவதும் உயிர் வாழ்வதற்காக மட்டுமே நீங்கள் போராடிக் கொண்டிருந்தால் எப்படி இருக்குமென்று ! உலக வல்லரசின் ஆதரவுடன், உலகின் நான்காவது பெரிய இராணுவம் உங்களையும் உங்கள் வீட்டையும் துடைத்தெறிவதற்கு மூர்க்கத்தனமாக முனைந்து கொண்டேயிருக்க, அதையெதிர்த்து நீங்கள் போராடிக் கொண்டேயிருக்க… வாழ்க்கை என்பதே இதுதான் என்றால்…
அதனால்தான் எனக்கு இப்படித் தோன்றுகிறது. இந்த பாலஸ்தீனக் குழந்தைகள் அமெரிக்கா எனும் என்னுடைய உலகத்தை உண்மையிலேயே நேரில் பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்ற கேள்வி என்னை வாட்டுகிறது.
நன்றி : ஃபிரண்ட்லைன் 11.04.2003
____________________________
புதிய கலாச்சாரம் மே 2003
____________________________
படங்கள்  : விக்கிபீடியா
ரச்சேல் கோரி கொல்லப்பட்ட உடன், அப்போதைய இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷரோன்  “தெளிவான, ஒளிவு மறைவில்லாத விசாரணை நடத்தப்படும்” என்று வாக்குறுதியளித்தார்.
ஆனால், இசுரேலின் இராணுவ விசாரணை “இராணுவத்தின் மீது எந்தத் தவறும் இல்லை, புல்டோசரின் ஓட்டுனர் ரச்சேலைப் பார்க்கவில்லை” என்று முடிக்கப்பட்டது.
ரச்சேல் கோரியின் பெற்றோர் இஸ்ரேலிலுள்ள ஹைஃபா மாவட்ட நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்தார்கள். அந்த நீதிமன்றம், இஸ்ரேலிய அரசு ரச்சேலின் மரணத்துக்கு பொறுப்பாகாது என்று தீர்ப்பு சொல்லி விட்டது.
ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு இராணுவங்களின் கொலைக்குற்றங்களுக்கான நீதி, ஏகாதிபத்தியங்களின் நீதிமன்றங்களில் கிடைக்கும் என்றும் யாரும் நம்பவில்லைதான்.

பதிப்புரை ;சவ்கத் அலி 
BOSTON; U.S.A

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval