Friday, February 24, 2017

அமெரிக்காவை விட்டு போங்க... அடுத்த அதிரடி செய்த டிரம்ப்

Related imageவாஷிங்டன்: விசா காலாவதியான 3 லட்சம் இந்தியர்களை வெளியேற்றுங்க... என்று வெறிப்பிடித்து உத்தரவிட்டுள்ளார் 
அமெரிக்க அதிபர் டிரம்ப்.

அமெரிக்கா அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். சமீபத்தில் 7 இஸ்லாமிய நாடுகளில் இருந்து மக்கள் குடியேறுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டார். 

இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. ட்ரம்ப்பின் இந்த உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றமே தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
இதையடுத்து தற்போது முறையான ஆவணங்கள் இன்றி விசா காலாவதியான அனைவரையும் வெளியேற்ற உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் உரிய விசா இன்றி 1 கோடி தங்கியிருப்பதாக கூறப்டுகிறது. இதில் 3 லட்சம் பேர் இந்தியர்கள் என கூறப்படுகிறது. தற்போது அவர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval