Thursday, February 2, 2017

ஒரு தலைக் காதல் தோல்வியால் கல்லூரி மாணவியை பொட்ரோல் ஊற்றித் தீவைத்த இளைஞர்!


ஒரு தலைக் காதல் தோல்வியால் கல்லூரி மாணவியை பொட்ரோல் ஊற்றித் தீவைத்த இளைஞர்!  கேரள மாநிலம் கோட்டயத்தில் தன்னைக் காதலிக்க மறுத்த பெண்மீது பெட்ரோல் ஊற்றித் தீவைத்த இளைஞர், தன்னையும் தீவைத்துக்கொளுத்திக் கொண்டதும், இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கோட்டயத்தில் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஒரு மருத்துவக் கல்லூரியில், நான்காம் ஆண்டு படித்து வந்த மாணவி லட்சுமியை, ஆதர்ஷ் என்கிற இளைஞர் ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். 

தன்னுடைய காதலை லட்சுமி ஏற்காத நிலையில், ஒரு கேனில் பெட்ரோலுடன் வந்த ஆதர்ஷ், லட்சுமியைத் துரத்திச்சென்று, பெட்ரோல் ஊற்றித் தீவைத்தார். அத்துடன் தன்மீதும் பெட்ரோல் ஊற்றித் தீவைத்துக்கொளுத்திக் கொண்டார்.

கல்லூரி வளாகத்திலேயே இந்தத் துயரம் நடந்த நிலையில், இருவரையும் மற்ற மாணவர்கள் காப்பாற்றி, கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். எழுபது விழுக்காடு தீக்காயமடைந்த ஆதர்சும், அறுபது விழுக்காடு தீக்காயமடைந்த லட்சுமியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

ஒருதலைக் காதலால் பெண்ணின் வாழ்வை எரித்ததுடன் தன்னையும் தீக்கிரையாக்கி இளைஞர் மாண்டது கோட்டயத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
courtesy;News7

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval