இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
Sunday, December 6, 2015
நிவாரணப் பொருட்களை வெள்ளத்தில் வீசினார்களா அமைச்சர் வளர்மதியின் ஆதரவாளர்கள்?
சென்னை; வெள்ள நிவாரணத்திற்காக பெங்களுருவிலிருந்து வந்த பல லட்ச மதிப்புள்ள நிவாரணப்பொருட்களை அமைச்சர் வளர்மதியின் ஆதரவாளர்கள் வீணடித்ததாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனமழையில் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்து, மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையிலிருந்து நழுவி கடும் சிரமங்களை அனுபவித்துவருகின்றனர்.
Saturday, December 5, 2015
தமிழகத்தில் தொலைதொடர்பு-வங்கி சேவைகள் விரைந்து சீரமைக்க அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவு
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கபட்ட தொலைதொடர்பு மற்றும் வங்கி சேவைகள் விரைந்து சீரமைக்க அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் மத்திய மந்திரி செயலாளர் சின்ஹா தலைமையில் சென்னை மற்றும் தமிழகத்தின் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நடைபெறும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஏசி இருக்கும் வீட்ல.. ? ஆஸ்துமா வருமாம்!
ஏசிஎன்று செல்லாம அழைக்கப்படும் குளிர்சாதனப்பெட்டி இருக்கவேண்டும். குளுமையாய் வேலை செய்யவேண்டும் என்று பெரும்பாலோனோர் விரும்புகின்றனர். வீடுகளில் ஏசி பொருத்தியிருப்பது சுற்றுச்சூழல் மாசுபாட்டினை ஏற்படுத்துவதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. மும்பை கெம் மருத்துவமனையைச் சேர்ந்த ஆய்வாளர் வீடுகளில் ஏசி பொருத்தியிருப்பதால் வீடுகளில் பூஞ்சை வளர்வதோடு ஆஸ்துமா, அலர்ஜி போன்றவைகள் ஏற்படுவதாகவும் கண்டறிந்துள்ளனர்.
Friday, December 4, 2015
சென்னை மியாட் மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம் : 18 நோயாளிகள் பலி
செம்பரம்பாக்கத்தில் திறந்து விடப்பட்ட வெள்ளநீர், அடையாறு ஆற்றில் பாய்ந்து, அதன் ஓரமாக இருந்த மியாட் மருத்துவமனைக்குள் புகுந்தது. இதனால் கடந்த 4 நாட்களாக மின்சாரம் தடைபட்டது. மருத்துவமனையில் வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் 18 பேர் பரிதாபமாக பலியாகினர். தமிழக அரசு கண்டுகொள்ளாமல் விட்டதால்தான் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மின் தடை ஏற்பட்டுள்ள பகுதியினர் உங்கள் செல்போனை சார்ஜ் செய்ய ஒரு யோசனை
இதனால் செல்போன் செயலிழத்து விட்டநிலையில் மக்கள் தங்கள் உறவினர்கள் நண்பர்களை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் வெள்ளம் வடியாததால் மின்சாரம் வராத நிலையில் சென்னை மாநகரம் இருளில் தத்தளித்து வருகிறது.
குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.4 ஆயிரம் வெள்ள நிவாரண நிதி புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு
புதுவையில் பெய்து வரும் கனமழை காரணமாக புதுவை நகரப்பகுதி முழுவதும் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக புதுவை மாநிலம் பாதிக்கபட்டு உள்ளது.
புதுச்சேரி, காரைக்காலில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.4 ஆயிரம் நிவாரண நிதி வழங்க உள்ளதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
Thursday, December 3, 2015
முதல் மாத சம்பளத்தை வெள்ளம் பாதித்த தமிழகத்திற்கு நிவாரணமாக அறிவித்தார் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி
Wednesday, December 2, 2015
தமிழ்நாட்டின் முதன்மைகள்:
nobel prize
1. நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் – சர்.வி.சி ராமன் (1930)
2. இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த தமிழர் – இராஜாஜி
3. பாரத ரத்னா விருது பெற்ற முதல் முதலமைச்சர் –இராஜாஜி
4. தமிழகத்தின் முதல் முதலமைச்சர் – சுப்புராயலு ரெட்டியார் (1920 – 21)
5. தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் – திருமதி. ஜானகி ராமச்சந்திரன் (1990)
2. இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த தமிழர் – இராஜாஜி
3. பாரத ரத்னா விருது பெற்ற முதல் முதலமைச்சர் –இராஜாஜி
4. தமிழகத்தின் முதல் முதலமைச்சர் – சுப்புராயலு ரெட்டியார் (1920 – 21)
5. தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் – திருமதி. ஜானகி ராமச்சந்திரன் (1990)
Tuesday, December 1, 2015
உண்மையான மதிப்பு மரியாதை அதிபர் விக்டர் யுஷ்செங்கோ
ஒருவர் உடைய காலை தொட்டு வணங்கும் பொழுது உண்மையான மதிப்பு மரியாதையின் காரணமாக தொட்டு வணங்கவேண்டும் பயத்தினால் வணங்க கூடாது .
அந்த உண்மையான மதிப்பு மரியாதையை அதிபர் விக்டர் யுஷ்செங்கோ அவர்களிடம் இருந்ததை நான் நேரில் பார்த்தேன்.
இந்திய குடியரசுத் தலைவராக இருந்த பொழுது புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்காக உக்ரைன் சென்றார் டாக்டர் அப்துல்கலாம் சார். அவர் உடன் நானும் நான்கு நாட்கள் சுற்று பயணம் மேற்கொண்டேன். அங்குள்ள பல்கலைக்கழகத்தில் உரையாற்றினார் டாக்டர் கலாம் சார்.
Subscribe to:
Posts (Atom)

