Saturday, December 5, 2015

தமிழகத்தில் தொலைதொடர்பு-வங்கி சேவைகள் விரைந்து சீரமைக்க அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவு

Central Government india logo
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கபட்ட தொலைதொடர்பு மற்றும் வங்கி சேவைகள் விரைந்து சீரமைக்க அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் மத்திய மந்திரி செயலாளர் சின்ஹா தலைமையில் சென்னை மற்றும் தமிழகத்தின் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நடைபெறும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அந்த ஆலோசனை கூட்டத்தில் தொலை தொடர்பு மற்றும் விமானப்படை அதிகாரிகள் கலந்துகொண்டனர். அதில் சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கபட்டுள்ள வங்கிகள் மற்றும் தொலை தொடர்பு சேவைகளை விரைவாக சீரமைக்க அதிகாரிகளுக்கு சின்ஹா வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval