Sunday, December 20, 2015

புத்தாண்டு கொண்டாட்டம் : சென்னைதான் இந்தியர்கள் விரும்பும் நகரம்!

new-year-partyபுத்தாண்டு கொண்டாட்டத்தை சென்னையில் வைத்துக் கொள்ளதான் பெரும்பாலான இந்தியர்கள் விரும்புவதாக ஆய்வு தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில், தாய்லாந்தின் கோ சுமி நகரை இந்தியர்கள் தேர்வு செய்கின்றனர்.
ஹோட்டல்ஸ். காம் என்ற இணையதளம் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. அதன்படி இந்த ஆண்டுக்கான புத்தாண்டு கொண்டாட்டத்தை எங்கு வைத்துக் கொள்ளலாம் என்று இந்தியர்களின் தேடலில்  137 சதவீதத்துடன்  சென்னை நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது.
கோவாவில் உள்ள கோல்வா கடற்கரை 132 சதவீதத்துடன் இரண்டாவது இடைத்தை பிடிக்கிறது. பூங்கா நகரான பெங்களூருவுக்கு இதில் 3வது இடம். அடுத்த இரு இடங்களையும் கோவாவில் உள்ள, ஆர்போரா, கண்டோலிம் பகுதிகள் பெறுகின்றன.
சர்வதேச அளவில் தாய்லாந்தின் கோ சுமி நகரை புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக இந்தியர்கள் தேர்வு செய்கின்றனர். அடுத்த இடத்தை ஹாங்காங் பிடிக்கிறது. கோலாம்பூருக்கு இந்த பட்டியலில் 3வது இடம். இந்தியர்கள் தேர்வு செய்யும் முதல் 10 இடங்களுக்குள் லண்டன் நகரமும் இடம் பெற்றிருக்கிறது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval