Thursday, December 31, 2015

துபாயில் தீ விபத்து!

புத்தாண்டு கொண்டாட்டம் விபரீதம் ஆனது.
சற்றுநேரத்திற்கு முன்பு துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான பர்ஜ் கலிபா அருகே உள்ள நட்சத்திர விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
துபாயில் உலகின் மிக உயரமான கட்டிடமான பர்ஜ் கலிபா அருகே உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் புத்தாண்டு கொண்டாடுவதற்காக ஏராளமான மக்கள் கூடியிருந்தனர்.அப்போது 20-வது மாடியில் இருந்து திடீரென தீ குபுகுபுவென பற்றி எரிந்தது. இந்த தீ விடுதியின் அனைத்து தளங்களுக்கும் பரவியது. இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த தீ விபத்து வானவேடிக்கையின் போது வெடித்த பட்டாசிலிருந்து வந்த தீப்பொறி பற்றி இருக்கலாம் என துபாய் போலீசார் கருதுகின்றனர். தீ குபுகுபுவென எரிவது குறித்து அறிந்த மக்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதனால் அந்த பகுதியில் உள்ள அனைத்து விடுதிகளும் மூடப்பட்டது.
இந்த தீ விபத்தில் பலியானவர்கள் குறித்து உடனடி தகவல் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval