Monday, July 7, 2014

தீன் குல பெண்மணிகள் அறியவேண்டிய ஓர் அற்புத பகிர்வு


quran : Open Quran Standகண்மணி நாயகம் முஹம்மது முஸ்தபா ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அன்னவர்கள் தாடி நனையும் 
வரை கண்ணீர் சிந்திய நிகழ்வு .......தீன் குல பெண்மணிகள் அறியவேண்டிய ஓர் அற்புத பகிர்வு .

* நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அன்னவர்கள் மஸ்ஜிதுன் நபவீ ''யில் வீற்றிருந்தசமயம்,ஒரு பெண்ணின் ஜனாஸா'' வந்து விட்டது தொழுகை நடத்த எல்லா சஹாபாக்களும் ஒளு' செய்துவிட்டார்கள்.பெருமானார் அன்னவர்கள் இமாமாக நின்று தஃபீர்' கட்டுவதற்காக கைகளை உயர்த்தும் சமயம் வானவர் கோமான் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம், வந்து அஸ்ஸலாமு அலைக்கும் யா..ரசூலுல்லாஹ் அல்லாஹ் ஸலாம் சொல்கிறான் . இந்த பெண்ணின் ஜனாஸாவை '' தாங்கள் தொழுகை வைக்க வேண்டாம் என்று உத்திரவிடுகிறான்.என்று கூறினார்கள் .கருணையே உருவான ஹாத்தமுன் நபி அன்னவர்கள்,ஜிப்ரயீலே ..! ஷஹாபியத்தான .பெண்ணாகி விட்டதே ..! என்னை நேரில் கண்டு ஈமான் கொண்ட பெண் அல்லவா ..? ஏன், நான் தொழுகை வைக்கக்கூடாது என்பதை அறிந்துகொள்ளலாமா ? என வினவ ..!

அல்லாஹ் சொல்கின்றான் இந்த பெண்ணின் ஜனாஸாவை'' தொழுகை வைக்க வேண்டுமானால் அந்த பெண்ணின் கபுரை'' சென்று பார்த்து விட்டு பிறகு தொழுகை நடத்தச்சொல்கிறான் என்றார்கள் .
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் ஷஹாபாக்களிடம் ''கை அமர்த்திவிட்டு'' நேராக சென்று கபுரை காண்கின்றார்கள் '' சுப்ஹானல்லாஹ்''பாம்பும் ,தேளும் ,விஷ ஜந்துக்களும் நிறைந்து காணப்பட்டது .அதைக்கண்டு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அன்னவர்கள் கவலையே உருவாக வருகின்றார்கள்.ஈமான் கொண்ட பெண்ணை எப்படியும் தொழுகை வைத்துத்தானே அடக்க வேண்டும் என்று எண்ணி தொழுகை வைக்கும் சமயம் மீண்டும் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் வந்து அஸ்ஸலாமு அலைக்கும் யா..ரசூலுல்லாஹ் ..! நீங்கள் தொழுகை வைக்க நாடினால் மீண்டும் ஒருமுறை சென்று கபுரை''பார்த்துவிட்டு பிறகு தொழுகை நடத்த சொல்கின்றான் என்றார்கள் .

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் திரும்பவும் சென்று கபுரை பார்க்கிறார்கள் ..கபுர்' அக்னி ஜுவாலையாக ,நெருப்பு குண்டமாக மாறி எரிகிறது .விஷ ஜந்துக்கள் அனைத்தும் நெருப்பு கங்குகளாக நெளிகின்றன .அதைக்கண்டு கருணை நபி அன்னவர்கள் கண்களில் கண்ணீர் மல்க ..இந்தப்பெண் என்ன பாவங்கள் செய்தவளாக இருக்கும் என எண்ணி ஷஹாபாக்களிடம் சென்று ..இந்த பெண் யார் ..? இவரைப்பற்றி நன்கு அறிந்தவர்கள் என்னிடம் வந்து சொல்லலாம் என அறிவித்தார்கள்.

அந்த பெண்ணின் பக்கத்து வீட்டுக்காரர்
வந்தார் முகமன் கூறி ..யா ..ரசூலுல்லாஹ் இந்தப்பெண்னைபற்றி எனக்குத்தெரியும் ஒரு நாள் விட்டு ஒருநாள் நோன்பு பிடிப்பார்,பேணுதலாய் தொழ க்கூடியவர்.தவராமல் தகஜத்,தொழுவார்.சதாநேரமும் குர்ஆன் திலாவத்துடன் இருப்பார் என சொன்னார்.அந்த பெண்ணின் கபுருக்கும் நீங்கள் சொல்லுவதற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை .அந்த பெண்ணின் கணவர் எங்கே ..? என்று வினவ .
அந்த பெண்ணின் கணவர் உயிருடன் தான் இருக்கிறார்.ஆனால் ஜனாஸா'' தொழுகைக்கு வரவில்லைஎன்று சஹாபாக்கள் கூறினார்கள் .உடனே இரண்டு ஷஹாபாக்களை அனுப்பி அவர் எங்கிருந்தாலும் அழைத்து வாருங்கள் என பணித்தார்கள் .அவரின் வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார் .சஹாபாக்களை கண்டு ஜனாஸா''அடக்கம் செய் தாகிவிட்டதா...?என கேட்டார் .எங்கு அடக்குவது ..பெருமானார் அன்னவர்கள் தொழுகை நடத்த நிற்கிறார்கள் ..பின்பு கபுரை ''சென்று பார்கிறார்கள் எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை ..உங்களை உடன் அழைத்து வரச்சொன்னார்கள் .என்றதும் புறப்பட்டு வந்தார் .உங்களின் மனைவியின் ஜனாஷாவிற்கு ஏன் வரவில்லை என்றார்கள்.யாரசூலுல்லாஹ் ..!''தலாக்கை ''அல்லாஹ் ஆகுமாக்கியுள்ளான் ஆனால் அதே சமயத்தில் ஒரு மனிதன் ''தலாக் ''விடுவானே ஆனால்'' அல்லாஹ்வின் அர்ஸ் '' ஆடுகின்றது என தாங்கள் பகர்ந்தீர்கள் . அந்த ஒரு வார்த்தையை நீங்கள் சேர்த்து சொல்லாமல் இருந்திருப்பீர்கள் என்றால் ...அவளை எப்போதோ ''தலாக் ''விட்டிருப்பேன்..

யா ..ரசூலுல்லாஹ் ..! தாகத்திற்கு என் மனைவியிடம் தண்ணீர் கேட்ப்பேன் போய் எடுத்துகுடித்துக்கொள் நான் குர்ஆன் ஓதுகிறேன் என்பாள் .வேலை செய்துவிட்டு களைத்து வந்து பசியுடன் உணவுகேட்ப்பேன் நான் நோன்பு வைத்துள்ளேன் என்னிடம் வந்து உணவு கேட்க்கிறாய் ..? எங்காவது போய் சாப்பிடு என்பாள் .எது கேட்டாலும் எரிந்து விழுவாள் ..நான் பொறுத்துக்கொண்டு வாழ்ந்துவிட்டேன் யா .. ரசூலுல்லாஹ் 
என்னால் என் மனைவியை மன்னிக்க முடியாது யா ரசூலுல்லாஹ் ..! என்றார் .

உங்களின் மனைவி எல்லா நல் அமல் களும் புரிந்தார். ஆனால் உங்களின் பொருத்தத்தை இழந்துவிட்டார் .கணவனின் பொறுத்தமில்லாமையின் காரணத்தால் உங்களின் மனைவி நரகம் செல்கின்றார்.என கபுரின் நிலைமையை நினைத்து கண்ணீர்விட்ட கருணை நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அன்னவர்களின் தாடி நனைந்து நீர் தாரைகள் நெஞ்சை நனைத்தன.{உம்மத்தின் காலில் முள் தைத்தால் கூட .பொறுத்துக்கொள்ள முடியாத கருணை உள்ளம் நிறைந்த காருண்ய நபி அன்னவர்கள் ...! } எனக்காக வேண்டி உங்களின் மனைவியை மன்னித்து விடுங்கள் என்றார்கள் .சஹாபாக்கள் அனைவர்களும் சோகம் ததும்ப காத்திருந்தனர் .பெண்ணின் கணவர் கருணை நபிநாதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அன்னவர்களின் கரங்களைபற்றி கதறி அழுதார். பெருமானார் அன்னவர்கள் ஜனாஸா'' தொழுகை நடத்தி நல்அடக்கம் செய்தபோது கபுர்'' சொர்க்க பூங்காவாக காட்சி அளித்ததாம் ''சுப்ஹானல்லாஹ் ''*

யார் ஒரு பெண்மணி தன் கணவரின் பொருத்தத்துடன் இந்த உலகத்தைவிட்டு மறைவாலேயானால் அவள் நாடிய சொர்க்கம் செல்லட்டும்'' என்பது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம் அன்னவர்களின் திரு வாக்கு .

மார்க்க அறிவற்ற சில பெயர் தாங்கி முஸ்லீம்கள் பெண்களும் /ஆண்களும் {மதம்மாறி } முர்த்தத்'' ஆகி கணவன் /மனைவிமார்களை அற்ப சுகத்திற்காக தன்தானே தேர்வு செய்துகொள்ளும் நிலை சமீப காலம் தொட்டு வலைத்தளத்தில் வளம் வந்து கொண்டிருக்கிறது .இஸ்லாமிய ஆணோ ,பெண்ணோ , முர்த்ததாகிவிட்டால்'அவர்களின் நல் அமல்கள் அனைத்தும் அந்த ஷனமே
அழிக்கப்பட்டுவிடுகிறது. நல் அமல்கள் அழிக்கப்பட்டால் அவர்களின் நிலை என்ன ..என்பதை நாம் சிந்திக்க கடமை பட்டுள்ளோம் .அல்லாஹ் அனைவரையும் பாதுகாப்பானாக ..!!
எல்லாம் வல்ல அல்லாஹ் ....
நம் தீன் குல பெண்கள் அனைவரையும் மானக்கேடான செயல்களைவிட்டு தடுத்து அந்நிய தீய சக்திகளின் சூழ்ச்சியைவிட்டும் பாதுகாத்து மேலும் நம் அனைவர்களுக்கும்நம்மைசார்ந்தவர்களுக்கும் அல்லாஹ்வின் திருபொருத்தத்துடன் கூடிய ''ஹுஸ்னுள் ஹாத்திமா'' 'எனும் இறுதி முடிவை நஷீபாக்கித்தருவானாக ..!ஆமீன் ...ஆமீன்...!! யா ..ரப்பில் ஆலமீன் ..!!

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval