Saturday, June 24, 2017

சென்னை கடற்கரை சாலையில் பைக் ரேசில் ஈடுபட்ட 12ம் வகுப்பு மாணவர் பலி


சென்னை கடற்கரை சாலையில் பைக் ரேசில் ஈடுபட்ட 12ம் வகுப்பு மாணவர் பலிசென்னை கடற்கரை சாலையில், பைக் ரேஸ் சாகசத்தில் ஈடுபட்ட 12ம் வகுப்பு மாணவர், பேருந்தில் மோதி உயிரிழந்தார். அவரது நண்பர்கள் 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

சென்னை மெரினா கடற்கரை சாலையில் நேற்றிரவு ஏராளமான இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டனர். ராயபுரம் மேம்பாலத்தில் அதி வேகமாக இரு சக்கர வாகனத்தை ஓட்டிய நிஜாம் என்ற 12ம் வகுப்பு மாணவன், தனியார் பேருந்து மீது மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் பயணம் செய்த  இரு இளைஞர்கள் பலத்த காயங்களுடன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினரின் கட்டுப்பாட்டினை மீறி சென்னையில் பைக் சாகசங்கள் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval