Tuesday, June 13, 2017

இரு வேறு பார்வைகள்*

“வீட்டிலே காபி கொடுத்தாள் 
மனைவி.  உள்ளே ஓர் எறும்பு கிடந்தது. 
அதைக் கண்ட கணவன் காபியை 
விடக் கொதிக்க ஆரம்பித்துவிட்டான். 
*விளைவு? சண்டை.* சந்தோசமான 
வீடு மூன்று நாள் துக்க வீடாக மாறிவிட்டது.

இதே சம்பவம் இன்னொரு வீட்டிலும் நடந்தது. 
அந்த வீட்டில் உள்ள கணவன் காபியில் செத்து மிதக்கும் எறும்பை எடுத்தான். அவன் மனைவியை அழைத்து மெதுவாகச் சொன்னான். 
*“உன் காபிக்கு என்னை விடவும் தீவிர ரசிகன் இந்த எறும்புதான். உன் காபிக்காக உயிரையே கொடுத்து விட்டது பார். இது போல் ரசிகர்களை வீணாய் இழந்து விடாதே.”*
மனைவி சிரித்தாள். 
தன் தவற்றை உணர்ந்தாள். அதன்பிறகு அவர்கள் வீட்டுக் காபியில் எறும்பு சாகவில்லை.
அவர்கள் *வீட்டின் மகிழ்ச்சியும் சாகவில்லை*.

*குறைகள் என்பது குறைத்து கொள்ள மட்டுமே.*
*மனதில் போட்டு குழப்பிக் கொள்ள அல்ல*
தகவல்;Irfan
Adirai

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval