Tuesday, September 2, 2014

மோடி ஆட்சியை விட மன்மோகன்சிங் ஆட்சியே சிறந்தது! – சென்னை வாசிகள் பெரும்பாலோர் கருத்து!

pm_modi_06122013பிரதமர் மோடி ஆட்சியை விட முந்தைய பிரதமர் மன்மோகன்சிங் அரசு சிறப்பானது என்று 55% சென்னை வாசிகள் கருத்து தெரிவித்துள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்து இன்றுடன் 100 நாட்களாகிறது. மோடியின் 100 நாள் ஆட்சி குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா நாட்டின் 8 முக்கிய நகரங்களில் கருத்து கணிப்பு நடத்தியது.
சென்னை நகரில் மோடி அரசு இந்துத்துவா பாதையை நோக்கி செல்வதாக 63% பேர் கருத்து தெரிவித்துள்ளனர் சென்னை நகரில் மோடி ஆட்சியை விட மன்மோகன்சிங் அரசு பரவாயில்லை என்று 55% பேர் கூறியுள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கொடுக்கப்படாதது குறித்து சென்னை வாசிகளில் 68% அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval