Wednesday, May 17, 2017

இரட்டை கொலை வழக்கில் கார் டிரைவருக்கு 3 ஆயுள்!

இரட்டை கொலை வழக்கில் கார் டிரைவருக்கு 3 ஆயுள்!
பழநியில் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் கார் ஓட்டுனர் ஒருவருக்கு 3 ஆயுள் தண்டனை வழங்கி திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே பாலசமுத்திரம் பகுதியை சேர்ந்த தனுஷ் என்ற பெண்ணையும் அவரது நண்பரையும் கடந்த 2014ம் ஆண்டு கார் டிரைவர் காளீஸ்வரன் அரிவளால் வெட்டி படுகொலை செய்தார்.

இருவரையும் கொன்ற பிறகு வீட்டில் இருந்த 23 லட்ச ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்த காளீஸ்வரன் தனுஷ்ன் மகள் சமிளாவை அழைத்து கொண்டு அங்கிருந்து தப்பி ஒடிவிட்டார். இது தொடர்பான வழக்கு திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த வந்த நீதிபதி கருணாநிதி, இரட்டை கொலை செய்த காளீஸ்வரனுக்கு 3 ஆயுள் தண்டனையும், 24 வருட சிறை தண்டனை மற்றும்  ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval