Thursday, May 18, 2017

குழிகுழியாய் இருக்கும் முகத்தை பளிங்குபோல் மாற்ற வேண்டுமா?.

முகத்தில் குழி குழியாக இருக்கும் பள்ளங்களை சரிசெய்ய இயற்கை வழிகளையே நீங்கள் நாட வேண்டியிருக்கும்.  


தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் வரையில் ஐஸ் கட்டிகள் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்வதால் சருமம் இறுக்கமடைந்து சருமுத்துளைகள் மூடிக்கொள்ளும்.

தக்காளி சருமச் சுருக்கத்தைப் போக்கும் ஆற்றல் கொண்டது. அது சருமத்தில் உள்ள  அழுக்குகளையும் முற்றிலுமாகப் போக்கிவிடும்.

தக்காளியை இரண்டாக வெட்டி, அதில் சர்க்கரையைத் தோய்த்து, முகத்தில் நன்றாகத் தேய்க்க வேண்டும்.  இது மிகச் சிறந்த ஸ்கிரப்பாகப் பயன்படும்.

பேக்கிங் சோடாவை வெதுவெதுப்பான நீரில் கலந்து பேஸ்ட் செய்து கொண்டு, அதை சருமத்தில் தடவி, நன்கு மசாஜ் செய்ய வேண்டும். பின்பு குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.

இவற்றை தொடர்ந்து செய்து வந்தாலே முகத்தில் குழிகுழியாக இருக்கும் சருமப் பள்ளங்கள் நீங்கி, முகம் பொலிவு பெறும்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval