Monday, May 15, 2017

திடீர் என நீரில் மூழ்கிய அரசு பஸ், தத்தளித்த பயணிகள், சினிமா பாணியில் காப்பாற்றிய கிராம மக்கள் – நேரடி காட்சிகள் – காணொளி

இரவு முழுவதும் பெய்த மழையால் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து பயணிகள் பேருந்த திடீர் என தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதை பார்த்த கிராம மக்கள் உடனடியாக சினிமா பாணியில் மீட்பு பணியில் ஈடுபட்டு பயணிகள் அனைவரையும் காப்பாற்றியுள்ளனர். இதன் நேரடி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில் Laksmeshwara என்ற இடத்தில் இருந்து Yellapura என்ற இடத்திற்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்துள்ளது. பஸ் பாலத்தின் மீது வந்ததும், இரவு முழுவதும் பெய்த மழையால் பாலத்தின் கீழ் உள்ள ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஓடியுள்ளது. இதில் சிக்கி பஸ் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
மீட்பு படையினர் வருவதற்குள் கிராம மக்கள் பஸ்சில் இருந்த பயணிகள், ட்ரைவர் உள்ளிட்டவர்களை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றியுள்ளனர்.


No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval