Tuesday, May 16, 2017

கிண்டி பேருந்து நிலையத்தில் பட்டப்பகலில் இளம் பெண்ணிடம் அத்துமீறி திருடும் திருடன், திருடனை சுழற்றி விட்டு பிடித்த வாலிபர் நேரடி காட்சிகள்

அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக சென்னை கிண்டி பேருந்து நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது, கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் திருடர்கள் தங்களின் கை வரிசையை காட்டுவது வழக்கம்.
அங்கு பேருந்திற்காக காத்திருந்த இளம் பெண்ணிடம் பட்டப்பகலில் அனைவரின் முன்னிலையில் திருடன் செல்போனை பறிக்கின்றான், இது பார்த்த அருகில் இருந்த வாலிபர் அந்த திருடனை பிடித்து ஒரு சுழற்று சுழற்றி விடுகின்றார், இதில் திருடன் பிடி படுகின்றான், பின்னர் அங்கே காவலுக்கு இருந்த போலிசார் திருடனை அழைத்து சென்றனர்.
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக பேருந்து நிலையத்திற்கு செய்தி சேகரிக்க சென்ற கேமராவில் இவை அனைத்தும் பதிவாகியுள்ளது.
பட்டப்பகலில் துணிகரமாக திருட முயன்ற திருடனை துணிச்சலாக மடக்கி பிடித்த இளைஞர்களை அங்கிருந்தவர்கள் பாராட்டினர்.
போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக கூட்டம் அதிகமாவதால் அதை திருடர்கள் சாதமாக பயன்படுத்திக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.




































No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval