Sunday, August 10, 2014

டெஹ்ரானில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது – அனைத்து 48 பயணிகளும் மரணம்!


Plane crashes near Tehran airportஇன்று ஞாயிற்றுக்கிழமை ஈரானின் டெஹ்ரான் நகரிலுள்ள மெஹ்ராபாட் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்திலேயே பயணிகள் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 48 பேரும் கொல்லப்பட்டனர்.
அவர்களின் 6 குழந்தைகள் உள்ளிட்ட 40 பயணிகள் மற்றும் 8 பணியாளர்களும் அடங்குவர்.
காலை 9.18 மணியளவில் செபாஹான் ஏர்லைன்ஸ் (Sepahan Airlines) என்ற நிறுவனத்திற்கு சொந்தமான அந்த விமானம் மத்திய டெஹ்ரானின் மேற்கிலுள்ள அசாடி மக்கள் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது.
தாபாஸ் (Tabas) என்ற கிழக்கு நகரை நோக்கி அந்த விமானம் பயணம் மேற்கொண்டிருந்த வேளையில் இந்த விபத்து நேர்ந்தது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval