Saturday, April 14, 2018

மாணவிகளை பெரும் புள்ளிகளின் படுக்கைக்கு வற்புறுத்தும் கல்லூரி பெண் பேராசிரியர்


அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பெண் பேராசிரியர் ஒருவர் 4 மாணவிகளை அதிகாரத்தில் உள்ள உயர் மட்ட பெரும் புள்ளிகளுடன் படுக்கைக்கு சம்மதித்து அவர்களின் ஆசைக்கு ஒத்துப்போக வற்புறுத்தும் ஆடியோ ஒன்று தற்போது சமூச வலைதளத்தில் பரவி வருகின்றது.
அந்த பெரும் பள்ளிகளின் ஆசைக்கு இணங்கினால் உங்களுக்கு பணம் கிடைப்பதோடு நல்ல மதிப் பெண்ணும் கிடைக்கும் என மாணவிகளுக்கு அவர் ஆசை வார்த்தை கூறுகின்றார்.
19 நிமிட உரையாடலில் இறுதியில் அந்த மாணவிகள் இதற்கு மறுப்பு தெரிவித்ததும் , ”அந்த பெரும்புள்ளிகள் யார் என்று தெரிந்தால் நீங்க மறுக்க மாட்டீங்க அவங்க பேர நான் சொல்லக் கூடாது அது டாப் சீக்கிரட் ஆளுநர் வீடியோ ஒன்னு அனுப்பியிருந்தேனே அத பாத்தீங்களா அத பாத்தீங்கன்னா உங்களுக்கு தெரியும் எந்த அளவு எனக்கு தொடர்பு இருக்கு என” அந்த ஆசிரிர், ஆளுநர் பெயரை கூறி அந்த மாணவிகளுக்கு ஆசை வார்த்தை கூறுகின்றார்.
அந்த ஆளுநர் யார் ? என்ன வீடியோ ? என்ற விபரங்கள் ஆடியோவில் இல்லை.
அந்த பெரும் புள்ளிகளுக்கு அர்ஜெண்ட்டா அடுத்தவாரம் ரெகுயுர்மண்ட் (படுக்கைக்கு அனுப்ப) இருக்காம் அதான் அவங்க கேட்டுகிட்டே இருக்காங்க என எந்த கூச்சமும் இல்லாமல் அந்த பெண் ஆசிரியர் மாணவிகளிடம் கேட்கின்றார்.
என்னை அவர்கள் பல முறை டெஸ்ட் செய்து விட்டார்கள் என பச்சையாக தான் பாலாகி போனதை அந்த மாணவிகளிடம் அந்த பெண் ஆசிரியர் கூறுகின்றார்.
அவர்களுக்கு சப்ளே செய்ய நாங்கள் இதில் 400 பேர் கிட்ட இருக்கோம் என அந்த பெண்களிடம் கூறி அவர்களை ப்ரைன் வாஷ் செய்கின்றார் அந்த ஆசிரியர்.
”இதனால் தான் எனக்கு பெரிய பெரிய வாய்ப்புகள் எல்லாாம் வந்தது அந்த வாய்ப்பை உங்களுக்கும் பெற்று தர ஆசைப் படுகின்றேன் நீங்க மறுக்காதீர்கள்” என திரும்ப திரும்ப மாணவிகளை அவர் வற்புறுத்துகின்றார்.
இறுதி வரை அந்த மாணவிகள் தொடர்ந்து மறுக்கின்றனர். கடைசியாக ”இது வெளிய யாரு கிட்டயும் சொல்லிடாதீங்க இன்னும் 2 நாள் டைம் எடுத்துக் கோங்க 2 நாள் கழிச்சு நீங்க முடிவு சொல்லுங்க அவசரப்பட வேண்டாம்” என்பதுடன் போன் உரையாடல் முடிகின்றது.
நான்கு மாணவிகளில் ஒரு மாணவியின் தந்தை ஒருவர் நக்கீரன் இதழ் அலுவலகத்தை அனுகி இது போன்றவற்றை தடுக்க இந்த ஆடியோவை கொடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
நக்கீரன் இதழ் இதை செய்தியாகவும் வெளியிட்டுள்ளது.
நக்கீரனை தவிர வேறு எந்த நாளிதழ் மற்றும் காட்சி ஊடகங்களும் இது குறித்து செய்தி வெளியிடவில்லை.
நிர்மலா என்ற அந்த ஆசிரியை இடை நீக்கம் செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஆடியோவில் கூறப்படும் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி இணையதளத்தில் அந்த ஆசிரியரின் பெயர் நீக்கப்பட்டுள்ளதையும் காண முடிகின்றது.
இந்த விவகாரம் இன்னும் விஸ்வரூபம் எடுக்காதததால் இது குறித்த மேலதிக விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இதன் மூலம் பல பெரும் புள்ளிகளின் உண்மை முகம் வெளியே வரும். சினிமா பாணியில் கல்லூரி நிகழ்ச்சிகளுக்கு செல்லும் பெரும் புள்ளிகள் அங்குள்ள மாணவிகளை பார்த்து ஆசைப்பட்டு இது போன்ற ஏஜேண்டுகள் மூலம் தங்களது ஆசையை தீர்த்துக் கொள்ளும் அசிங்கங்கள் வெளியே வரும்.
மாணவிகளின் நலன் கருதி மாணவிகள் பெயர் மற்றும் அவர்கள் பேசுவது mute செய்யப்பட்டே சம்பந்தப்பட்டவர்கள் இந்த ஆடியோவை வெளியிட்டுள்ளனர்.



No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval