Monday, April 9, 2018

நிருபர்களுடன் எல்லைமீறிய வாக்குவாதம் கோவமாக வெளியேறிய சிம்பு ..!!! வைரலாகும் வீடியோ..!!!

நிருபர்களுடன் வாக்குவாதம் ஆகி வெளியேறிய சிம்புவின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது
 சென்னை தியாகராய நகரில் உள்ள தனது இல்லத்தில் நடிகர் சிம்பு செய்தியாளர்களிடம் பேசினார். சினிமா துறையில் உள்ள பிரச்னைகளை தீர்க்கவே சினிமா துறை திண்டாடி வருகிறது. நடிகர் சங்க மவுன போராட்டத்தில் எனக்கு உடன்பாடில்லை. பேசாமல் இருந்ததால்தான் இந்த பிரச்னையே வந்தது. எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனி மீண்டும் கேப்டனாக வந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவர் மீது எனக்கு பெரிய மரியாதை உள்ளது. தமிழ்நாட்டின் மீதும், சென்னை மக்கள் மீதும் நாம் வைத்திருக்கும் அன்பைவிட அதிகமான அன்பை வைத்திருக்கும் ஒரு மனிதர் என்றால் அது தோனி தான். கண்டிப்பாக தோனிக்கு இந்த விவகாரம் குறித்து தெரியும். நான் அவரை எந்த போராட்டத்திலும் ஈடுபட சொல்லவில்லை. ஐபிஎல் போட்டிகளில் விளையாட வேண்டாம் என கூறவில்லை. போட்டிகளின் போது கருப்பு பேட்ஜ் அணியுங்கள் இல்லையென்றால், உங்களால் ஏதாவது செய்ய முடிந்தால் அல்லது செய்ய முடிந்ததை செய்யுங்கள் என தோனிக்கு கோரிக்கை வைக்கிறேன். தோனிக்கு நம் மீது மரியாதை உள்ளதால் இதனை அவரிடம் கேட்கிறேன்” எனத் தெரிவித்தார்.
பின்பு அவர் நிருபர் கேட்ட கேள்வியொன்றிற்கு அவர் கோபத்துடன் சென்றார் இதைப்பற்றி கீழேயுள்ள விடியோவை பாருங்கள்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval