Monday, April 23, 2018

ரிப்பேருக்கு சென்று வந்த வாடர் கூலரை பரிசோதித்து திறந்து பார்த்த சிறை அதிகாரிகள் அதிர்ச்சி

பஞ்சாப் மாநிலம் அமிர்தரசஸில் உள்ள மத்திய சிறை அதிகாரிகள் ரிபேருக்கு சென்று வந்த தண்ணீர் குளிர்சாதன பெட்டியை திறந்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிறை அதிகாரி ஒருவர் எடுத்த காணொளி தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது.
கோடை காலம் என்பதால் சிறையில் வாடர் கூலர் வைக்கப்பட்டுள்ளது. இது பழுதானதை தொடர்ந்து சிறை அதிகாரிகள் அதை பழுது பார்க்க வெளியே கொடுத்துள்ளனர்.
பழுது பாாக்கப்பட்டு வந்த வாடர் கூலரை தர்செயலாக பரிசோதித்து பார்த்த அதிகாரிகள் அதில் பண்டல் பண்டலா பீடி கட்டுகள் மற்றும் சிகிரெட்டுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கூலர் பாக்சிற்கு கீழ் பகுதியில் சுமார் 1800 பண்டல்களை ஒழித்து வைத்துள்ளனர். சிறை கைதிகளுக்கு சப்ளே செய்ய உள்ளிருந்தே யாரே நூதனமான முறையில் இதை ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த கூலர் பாக்சுகள் ஏற்கனவே உள்ளிருந்த கைதிகள் வெளியே சென்றதும் உள்ளே வருபவர்கள் பருகுவதற்காக அன்பளிப்பாக வழங்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval