Friday, April 13, 2018

அநியாயமாகக் கற்பழித்துப் படுகொலை செய்யப்பட்ட சிறுமி ஆஸிஃபா

Image may contain: 1 person, sunglasses and closeup
அநியாயமாகக் கற்பழித்துப் படுகொலை செய்யப்பட்ட சிறுமி ஆஸிஃபாவைப் பற்றி ...
இதுவரை மோடி கருத்துத் தெரிவிக்காதது தேசத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது ...
அதை விடக் கொடுமை ...
கற்பழித்த கயவர்களின் மீது ...
முதல் தகவல் அறிக்கையைத் தாக்கல் செய்யச் சென்ற ...
காஷ்மீர காவல் துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்து ...
குற்றவாளிகளுக்கு ஆதரவாக வன்முறையில் இறங்கிய இந்துத்துவ காஷ்மீர வழக்கறிஞர்களின் செயல் ஏற்க இயலாதது ...
காஷ்மீரில் மனிதநேயம் மிக்க வழக்கறிஞர்கள் பலர் உண்டு ...
ஆயினும் ...
ஆஸிஃபாவின் படுகொலைக் குற்றவாளிகளைக் காக்கும் விதமாக சில காஷ்மீர் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவது இரக்கமற்ற செயல் ...
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி அனைத்து வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் இணைச் செயலாளர் என்ற முறையில் காஷ்மீர் வழக்கறிஞர்களுக்கு எனது வன்மையான கன்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் ...
தோழமையுடன்
வழக்கறிஞர் திலகர்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval