Monday, April 16, 2018

சிரியாவின் சிறுமி தனது கையால் எழுதிய மரண சாசன குறிப்பு -படித்ததில் வலித்தது,

Image may contain: 1 personசிரியாவின் சிறுமி தனது கையால் எழுதிய மரண சாசன குறிப்பு உலகையே நிலைகுலைய வைத்திருக்கிறது
அந்த குறிப்பை படித்த துருக்கி அதிபர் ரஜப் எர்துகான் ஒரு நிகழ்சியில் கதறி அழுதார்
அந்த சிறுமி எழுதியது
மனித உயிர்களை கைபற்றும் மரணத்தின் வானவரே
எனது உயிரை சற்று விரைந்து கை பற்றுவீராக
இங்கு பசியால் துடிப்பதை விட
சுவனத்தில் எனது இறைவன் வழங்கும் பாக்கியங்களை சுவைக்கிறேன்
என்னருமை தாயே
எனது மரணத்திற்கு பிறகு
எனது வசந்த காலங்களை மட்டும் நீங்கள் எண்ணி மகிழுங்கள்
எனது சகோதரர்களே
நான் பசியால் இறந்து விட்டேன்
என்ற செய்தியை எனது நண்பர்களுக்கு சொல்லி விடுங்கள்
இந்த செய்தியை தனக்கு கவுரவ டாக்கடர் பட்டம் வழங்க பட்ட விழாவில் படித்த துருக்கி அதிபர் கதறி அழுதார்
அவர் மட்டும் அழவில்லை இந்த செய்தியை படிக்கும் ஒவ்வொரு முஸ்லிமும் அழுகிறான்
என்று முடியும் இந்த துயரம் என்று விடியும் சிரிய மக்களின் வாழ்க்கை
பிரார்த்திப்போம் அந்த மக்களின் விடியலுக்காக
கையேந்துவோம் இறைவனிடம் உருகிய மனதோடு
எங்கள் இறைவா சிரிய மக்களின் வாழ்வில் விரைவாக விடியலை தோற்று விப்பாயாக அந்த மக்களின் குற்றங்குறைகளை மன்னித்து அவர்களின் வாழ்வில் வசந்த தென்றலை மீண்டும் வீச செய்வாயாக!!

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval