Friday, August 5, 2016

பெங்களூருவில் 2ம் வகுப்பு மாணவியை பெல்டால் அடித்து சித்தரவதை செய்த கொடூரம்

பெங்களூருவில் வீட்டுப்பாடம் செய்யவில்லை என கூறி 2ம் வகுப்பு மாணவியை ஆசிரியை ஒருவர் பெல்டால் அடித்து சித்தரவதை செய்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு அருகே உள்ள நீலமங்கலா பகுதியை சேர்ந்த ஆஷா என்பவரது மகள் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். அவர் அதே பகுதியில் உள்ள லதா என்ற ஆசிரியையிடம் டியூசன் சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டுப்பாடம் செய்யவில்லை என கூறி ஆசிரியை லதா, 2ம் வகுப்பு மாணவியை பெல்டால் அடித்துள்ளார்.

இதில் மாணவிக்கு பல்வேறு பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மாணவியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval