Thursday, August 25, 2016

நடுவானி விமானத்தில் கோளாறு: 300 பேருடன் ஏர் இந்தியா விமானம் பத்திரமாக தரையிறக்கம்

Airindia flight lமும்பையிலிருந்து அமெரிக்கா சென்ற ஏர் இந்தியா விமானம், கோளாறு காரணமாக கஜகஸ்தானில் தரையிறக்கப்பட்டது. 300 பேருடன் அமெரிக்காவின் நேவார்க் நகருக்குச் சென்ற போயிங் ரக விமானத்தில், நடுவானில் எச்சரிக்கை கருவி ஒலி எழுப்பியது.
இதையடுத்து, சுதாரித்த விமானி, கஜகஸ்தானில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் தரையிறக்கப்பட்டதாகவும், மாற்று விமானம் மூலம் பயணிகள் அமெரிக்கா அழைத்துச்செல்லப்படுவதாகவும் ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval