Sunday, August 7, 2016

"இன்று ஒரு இளநீர் வியாபாரியின் செய்கை எனக்கு வித்தியாசமாக இருந்தது.

"இன்று ஒரு இளநீர் வியாபாரியின் செய்கை எனக்கு வித்தியாசமாக இருந்தது.
குடித்த இளநீர்களை ரெண்டு துண்டாக
வெட்டுவதற்கு பதிலாக நான்கு துண்டுகளாக வெட்டி வீசினார்.
ஏண்ணே எப்பவும் ரெண்டா பொளந்துதானே வீசுவீங்க! இப்ப நான்கா போடறிங்க என்றேன்!
அது ஒண்ணுமில்ல தம்பி! வரபோறது
மழைக்காலம் பாருங்க! ரெண்டா போட்டால் மழைத் தண்ணி சேர்ந்து அதுல கொசு நிறைய உற்பத்தி ஆகும்!
இப்பதான் கொசுவால் புதுசு புதுசா நோய் வருதாமே! அதனாலே இப்படி போட்டால் தேங்காய் மூடியில தண்ணி நிற்காது பாருங்க என்றார்.
ஒரு சாமானியனின் சமூக அக்கறை வியக்க வைத்தது.. வாழ்க ஜனநாயகம்..
courtesy;Dinakaran

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval