நெல்லை மாவட்டம் பத்தமடை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி பாஹிரா பானு 499 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பெற்றவர்களில் ஒருவராகி சாதனை படைத்துள்ளார். பிளஸ் 2வில் உயிரியல் பாடம் எடுத்து பின் மருத்துவம் படிக்க அவர் ஆசை தெரிவித்துள்ளார். மாணவி பாஹிரா பானுவிற்கு ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் சாதனை:
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த 19 பேரில் 10 பேர் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த 10 பேரில் 8 பேர் மாணவிகள் ஆவர். இந்த 8 மாணவிகளும் ஸ்ரீவிஜய் வித்யாலயா பள்ளி மாணவிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மற்ற இருவர் செந்தில் பள்ளியைச் சேர்ந்தவர்கள் ஆவர். அக்ஷயா,தீப்தி, காவியா,கிருத்திகா, மைவிழி, ரேவதி, சந்தியா, ஸ்ரீவந்தனா ஆகியோர் ஸ்ரீவிஜய் வித்யாலயா பள்ளி மாணவிகள் ஆவர். தருமபுரி செந்தில் பள்ளியைச் சேர்ந்த கயல்விழி, தீப்தியும் முதலிடம் பிடித்தனர்.
பாடவாரியாக முழுமதிப்பெண்கள் விவரம்;
பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தமிழ்பாடத்தில் 255 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
ஆங்கிலத்தில் 677 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
கணிதத்தில் 18,682 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
அறிவியல் பாடத்தில் 69,560 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
சமூக அறிவியல் பாடத்தில் 26,554 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval