Tuesday, January 10, 2017

ஆண்களை பற்றி ஒரு மனைவி எழுதியது*



ஆண் என்பவன்...*

*கடவுளின் உன்னதமான படைப்பு.*

*சகோதரிகளுக்காக, இனிப்புகளை தியாகம் செய்பவன்.*

*பெற்றோர்களின் ஆனந்தத்திற்காக, தன் கனவுகளை தியாகம் செய்பவன்.
*

*காதலிக்கு பரிசளிக்க,*
*தன் பர்ஸை காலி செய்பவன்.*

*மனைவி குழந்தைகளுக்காக ,  தன் இளமையை அடகு வைத்து அலட்டிக் கொள்ளாமல் அயராது உழைப்பவன்.*

*எதிர்காலத்தை லோன் வாங்கி கட்டமைத்துவிட்டு, அதனை அடைக்க வாழ்க்கை முழுதும் லோ லோ என்று அலைபவன்..*

*இந்த போராட்டங்களுக்கு இடையில்,*
*மனைவி-தாய்-முதலாளிகளின் திட்டுகளை வாங்கி,*
*தாங்கிக்கொண்டே ஓடுபவன்.*

*அடுத்தவர்களின் ஆனந்தத்திற்காகவே ஆயுள் முழுக்க அர்ப்பணிப்பவன்.*

*அவன் வெளியில் சுற்றினால்,*
*'உதவாக்கரை' என்போம்.*

*வீட்டிலேயே இருந்தால்,*
*'சோம்பேறி' என்போம்.*

*குழந்தைகளை கண்டித்தால்,*
*'கோபக்காரன்' என்போம்,*

*கண்டிக்கவில்லை எனில்,*
*'பொறுப்பற்றவன்' என்போம்.*

*மனைவியை வேலைக்கு செல்ல, அனுமதிக்காவிடில்*
*'நம்பிக்கையற்றவன்' என்போம்,*

*அனுமதித்தால் 'பொண்டாட்டி சம்பாத்தியத்தில் பொழப்பை ஓட்டுபவன்' என்போம்.*

*தாய் சொல்வதை கேட்டால்,*
*'அம்மா பையன்' என்போம்.*

*மனைவி சொல்வதை கேட்டால்,*
*'பொண்டாட்டி தாசன்' என்போம்.*

*ஆக மொத்தத்தில் ஆண்களின் உலகம், தியாகங்களாலும் வியர்வையாலும் சூழப்பட்டது.*

*இதனை பகிர்ந்து, ஆண்களுக்கு புன்னகையையும்*

*பெண்களுக்கு புரிதலையும், ஏற்படுத்தலாம்...*
🅰💲

👫👫👫👫👫👫👫👫👫
*ஆண்*

*அழத் தெரியாதவன் அல்ல*
கண்ணீரை
மறைத்து வைக்கத் தெரிந்தவன் ..

*அன்பில்லாதவன் அல்ல*
அன்பை மனதில் வைத்து
சொல்லில் வைக்கத் தெரியாதவன் ..

*வேலை தேடுபவன் அல்ல*
தன் திறமைக்கான
அங்கீகாரத்தை தேடுபவன் ..

*பணம் தேடுபவன் அல்ல*
தன் குடும்பத்தின்
தேவைக்காக ஓடுபவன் ..

*சிரிக்கத் தெரியாதவன் அல்ல*
நேசிப்பவர்களின் முன்
குழந்தையாய் மாறுபவன் ..

*காதலைத் தேடுபவன் அல்ல*
ஒரு பெண்ணிடம்
தன் வாழ்க்கையை தேடுபவன் ..

*கரடுமுரடானவன் அல்ல ..*
நடிக்கத் தெரியாமல்
கோபத்தை கொட்டிவிட்டு
வருந்துபவன் ..







No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval