Monday, January 30, 2017

தவறு எங்கு நடந்தாலும் தட்டிகேட்கும் மாணவர்கள் – போராடும் குணத்தை ஏற்படுத்திய ஜல்லிக்கட்டு

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் எக்ஸல் தனியார் கல்லூரியில் அதிக கட்டணம் வசூல் செய்வதாகவும், தரமான உணவு வழங்குவது இல்லை என்றும், இது குறித்து கேட்டால் கண்மூடித்தனமாக அடியாட்கள் வைத்து மாணவர்கள் தாக்கப்படுவதாகவும், கல்லூரி மாணவ, மாணவியர் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கல்லூரி கட்டிடத்திலுள்ள கண்ணாடி ஜன்னல்களை அடித்து நொறுக்கினர். பாதுகாப்பிற்கு போலீஸார் குவிக்கப்பட்டு மாணவர்களை கட்டுப்படுத்தி வருகின்றனர். மாவட்ட கலெக்டர் கல்லூரி நிர்வாகத்திடம் பேசி வருகிறார். மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர்.
ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற மாணவர்கள், தவறு எங்கு நடந்தாலும் தட்டி கேட்கும் போராட்ட குணம் வந்துள்ளது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval