Sunday, July 30, 2017

கள்ளக்காதலியின் மகளை பலாத்காரம் செய்த போலீஸ் ஏட்டு கைது

கள்ளக்காதலியின் மகளை பலாத்காரம் செய்த போலீஸ் ஏட்டு கைதுதுமகூரு ஜெயநகர் போலீஸ் நிலையத்தில் ஏட்டுவாக பணியாற்றி வருபவர் மோகன். இவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியது. கடந்த 6 ஆண்டுகளாக இருவருக்கும் கள்ளக்காதல் உள்ளது. இதுகுறித்து அறிந்த அந்த பெண்ணின் கணவர் அப்பெண்ணை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் அந்த பெண் 15 வயது நிரம்பிய தனது மகளுடன் தனியாக வசித்து வந்தார். இதற்கிடையே, மோகன் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக கள்ளக்காதலியின் மகளான 15 வயது சிறுமியை மோகன் மிரட்டி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக சம்பவம் குறித்து துமகூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திவ்யா கோபிநாத்திடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தினார். அப்போது, சிறுமியை மோகன், பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவருடைய உத்தரவின்பேரில் மோகன் கைது செய்யப்பட்டார். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக, நேற்று போலீஸ் சூப்பிரண்டு திவ்யா கோபிநாத் தெரிவித்தார்.
courtesy Dailythanthi

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval