Tuesday, July 25, 2017

உடம்பில் உள்ள சளி உடனே வெளியேற நீங்கள் செய்ய வேண்டிய எளிய முறை!


பாட்டி கைவைத்தியம்;
உடம்பில் உள்ள சளி உடனே வெளியேற நீங்கள் செய்ய வேண்டிய எளிய முறை.
பொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி பிடித்தால் எந்த மருந்தை உட்கொண்டாலும் குணமாகாது.
செய்முறை :
மூன்று பழுத்த எலுமிச்சை பழத்தை எடுத்து, அதை பாதியாக வெட்டி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி, அதில் தேவையான அளவு உப்பு போட்டு, நன்கு கொதிக்க வையுங்கள் பின்பு.
கொதிக்க வைத்த இரண்டு டம்ளர் நீர், ஒரு கப் அளவு குறையும் வரை கொதிக்க விடுங்கள். பிறகு அந்த எலுமிச்சை பழத்தையும் பிழிந்து அந்த நீரை ஒரு கப்பில் எடுத்து சிறிதளவு சீனி சேர்த்துக் கொள்ளுங்கள் பின்னர்.
ஓரளவு சூட்டுடன் இரவு தூங்க செல்லும் அரை மணி நேரத்துக்கு முன்பு குடித்து விட்டு நிம்மதியாக தூங்குங்கள்.
நீங்கள் உறங்கிய பின்னர், உங்களுக்கு வியர்வையாக வியர்த்து உங்கள் உடம்பில் உள்ள சளி முழுவதும் வெளியேறி விடும்.
பிறகு மருத்துவர்களிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்கவே இருக்காது. பணமும் மிச்சம். பக்கவிளைவுகளும் இல்லை…
நல்ல பதிவுகளை அதிகமாக பகிருங்கள்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval