Tuesday, July 18, 2017

ஒருவருக்கு திடீர் சந்தேகம் வந்ததது மனைவிக்கு காது கேட்கவில்லையோ ?

ஆனால் இதை மனைவியிடம் நேரடியாக கேட்க தயக்கம் .
தயக்கம் என்ன , பயம்தான் .

🐣இந்த விஷயத்தை அவரின் குடும்ப டாக்டரிடம் சொன்னார்.
அதற்க்கு அவர் ஒரு எளிய யோசனை சொன்னார் .
இருபதடி தூரத்தில் இருந்து மனைவியிடம் ஏதாவது பேசிப்பாருங்கள் ,
மனைவியின் காதில் விழவில்லையெனில் சற்று நெருங்கி பதினைந்து அடி தூரத்தில் இருந்து பேசுங்கள் ,
பின் பத்து , ஐந்து இப்படி குறைத்துக்கொண்டே நெருங்கிச்சென்று பேசுங்கள். 

🐣எத்தனை அடி தூரத்தில் இருந்து பேசினால் மனைவிக்கு காதுகேட்கவில்லை என தெரிந்தால் அதற்கேற்றபடி சிகிச்சை அளிக்கலாம் என டாக்டர் சொன்னார்.
கணவனுக்கு ஒரே குஷி.

🐣உற்சாகமாக வீடு திரும்பிய அவர் வீட்டு வாசலில் இருந்த படியே உள்ளிருந்த மனைவியிடம் இன்று என்ன சமையல்? எனக்கேட்டார் .
பதிலில்லை ,
பின் வீட்டு வரவேற்பறையில் இருந்து அதே கேள்வியை கேட்டார்.
அதற்கும் பதிலில்லை ,
ஹாலில் இருந்து கேட்டார் ,
சமையலறை வாசலில் இருந்தும் மீண்டும் மீண்டும் கேட்டார்.
மனைவியிடமிருந்து பதிலே இல்லை. 

🐣போச்சு ரெண்டு ஸ்பீக்கரும் அவுட்தானென மனதில் கன்ஃபர்ம் செய்து விட்டார்.

கடைசி வாய்ப்பாக மனைவியின் காதருகே சென்று சத்தமாக “ ................... " இன்றைக்கு என்ன சமையல் ?“ ............என கேட்டார்.

🐣காதில் ஏதோ குண்டு வெடித்தது போல் இருக்கவே!
அவர் மனைவி அவரை கோபமாக திரும்பிப்பார்த்து ”
ஏன் இப்படி கத்துறீங்க ,
நீங்களும் வாசல் கேட்டிலிருந்து ,
வரவேற்பறையில் இருந்து ,
ஹாலில் இருந்து ,
சமைலறை வாசலில் இருந்து கேட்க ,

நானும் முருங்கைக்காய் சாம்பார் ,
உருளைக்கிழங்கு பொரியல் ன்னு சொல்லிக்கிடேயிருந்தேனே!

காதில் விழவில்லையா ?

காதுல என்ன பஞ்சு மூட்டையா வெச்சுருக்கீங்க!?
என பொரிந்து தள்ளிவிட்டாள்

🐣இப்போது தெரிகிறதா ! பிரச்சினை யார் காதில் என்பது ?

இப்படித்தான் *பிரச்சினை நம்மிடம் வைத்துக்கொண்டு அது பிறரிடம் இருப்பதாக நாம் நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்* .

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval