Saturday, April 12, 2014

தேர்தல் !


upcoming_assembly_election_2014.jpg
ஒவ்வொரு தேர்தலிலும்
வெவ்வேறு கூட்டணிகள்
ஒவ்வாதோர் ஒன்றிணைந்து
உருவாக்கும் நாடகங்கள்

திரும்பும் திசைகளெங்கும்
தேர்தல் பிரச்சார சப்தம்
திகட்டுமளவு அனுதினமும்
                                                வாக்குறுதிகள் நித்தம்

களப்பணியில் மூழ்கிடும்
தொண்டர்கள் கூட்டம்
காய்ந்த வயிற்ருடன் கிடக்கும்
அத் தொண்டனின் குடும்பம்

ஆணவங்கள் கொண்டவரும்
அடங்கி வந்து பிரச்சாரம் செய்வர்
ஆசைகளை உள்ளடக்கி
ஆட்சியமைக்க காத்திருப்பர்

மானங்கள் போனபோதும்
மாற்றுக்கட்சி நகைத்தபோதும்
தானங்கள் பலவழங்கி
தன்னிலையை உயர்த்திக்கொள்வர்

மக்களாட்சி மலருமென
மனமுறுக வாக்குரைப்பர்
வந்தமர்ந்த மறுகணமே
சிந்தையைவிட்டு மறந்துபோவர்

எக்கட்சி எதிர்த்து நின்றும்
ஏகமாய் நம்பியிருப்பார்
இறுதியில் முடிவுகேட்டு
ஏமாறுவர் பாமர மக்கள் 

இனியதனை வீழ்த்திடவே
இதிகாசம் படைத்திடவே

நலிந்தோரின் துயர்துடைக்க
நாட்டில் ஒழுங்கை சீர்படுத்த
நல்லாட்சி அமைந்துடவே
நாட்டுமக்கள் ஒன்றிணைந்து

தேர்தலெனும் சந்தையிலே
தேர்ந்து விலைபோய்விடாமல்
சிந்தையிலே உதிக்கும் நல்ல
சிறந்தோர்க்கு வாக்களிப்போம்
அதிரை மெய்சா 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval