Sunday, December 31, 2017

நேற்று இரவு ஒரு முகநூல் பக்கத்தினை எதேர்ச்சையாக பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது

 எனது மதிப்புக்குரிய நண்பர்களே அனைவருக்கும் எனது வணக்கம் 

நேற்று இரவு ஒரு முகநூல் பக்கத்தினை எதேர்ச்சையாக பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது 

அதிலே பல பெண்களுடைய புகைப்படங்கள் இடம் பெற்று இருந்தது அப் படங்களுக்கு மேல், share பண்ணுபவருக்கு என் தொலைபேசி எண் அனுப்பி வைக்கப்படும், இன்று எனக்கு பிறந்த நாள், வாழ்த்துங்கள் நண்பர்களே,என்னைப் பிடிக்குமா share பண்ணுங்கள் என்று பல வசனங்கள் எழுதி பல பெண்களின் படங்கள் 
இடம் பெற்று இருந்தது. இதிலே கவலைக்குரிய விடயம் என்ன வென்றால் அதை நம்பி பல பேர் share பண்ணி இருக்கின்றார்கள் பல பேர் like பண்ணி இருக்கின்றார்கள் பல பேர் தங்கள் தொலைபேசி எண்ணை comment லே பதிவிட்டு இருக்கின்றார்கள். உலகத்திலேயே அதுவும் நம் நாட்டில் எந்த ஒரு பெண்ணும் இவ்வாறு தன்னுடைய புகைப்படத்தைப் முகநூலில் இட்டு share பண்ணுபவருக்கு number அனுப்பி வைக்கப்படும் என்று ஒரு பதிவை இடமாட்டாள். தவறான முகநூல் பக்கங்களில் தன்னுடைய படத்தை இட்டு நான் அழகாக இருக்கின்றேனா என்று கேட்க மாட்டாள். தயவு செய்து சிறிது சிந்தியுங்கள் நீங்கள் இவ்வாறு share ,like ,comment பண்ணும் அந்த பெண்கள் யாரோ ஒரு குழந்தைக்கு தாயாகவோ,  யாரோ ஒரு கணவனுக்கு துணைவியாகவோ, நம்மைப் போன்றவர்களுக்கு அக்காவாகவோ தங்கச்சியாகவோ இருக்கின்றவர்கள்தான் தேவை இல்லாமல் அவர்களின் வாழ்க்கையை அழித்துவிடாதீர்கள். 

இதுவே நமது வீட்டுப் பெண்கள் என்றால் நாம் இவ்வாறு செய்வோமா?? 

#பெண்களே
தயவு செய்து உங்கள் படங்களை முகநூலில் இடாதீர்கள் அவ்வாறு இட வேண்டும் என்னால் நண்பர்கள் மட்டும்தான் பார்க்க முடியும் என்றவாறு இடுங்கள் தெரியாதவர்களை நண்பர்கள் ஆக்காதீர்கள் உங்களை உண்மையாக நேசிக்கும் அதே நேரம் உங்களை கரம் பிடிப்பான் என்று நீங்கள் நம்பும் ஆண்ணுக்கு மட்டுமே படங்களை அனுப்புங்கள் உங்கள் தொலைபேசி அல்லது laptop பழுதாகி விட்டால் நம்பிக்கைக்கு உரியவர்களிடம் மட்டுமே திருத்தக் கொடுங்கள் இல்லாவிட்டால் உங்கள் படங்களும் அவ்வாறான பக்கங்களில் வருவதை யாராலும் தடுக்க முடியாது நன்றி வணக்கம்
தகவல் ;IRFAN
ADIRAI





No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval