Saturday, December 30, 2017

”உனக்கு நான் கசக்குதா

புதுக்கோட்டை அறந்தாங்கி: சரண்யா உதயகுமார் இருவக்கும் திருமணம் ஆகி 2 வயதில் குழந்தை உள்ளது. உதயகுமார் வேலைக்கு போகாமல் மனைவி சம்பாதிக்கும் பணத்தில் வாழ்ந்ததாக கூறப்படுகின்றது. உயகுமாருக்கு குடி பழக்கம் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இதனால் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு 2 வருடங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்துள்ளனர்.
இந்நிலையில் திடீர் என சரண்யா வேலை செய்யும் அலுவலகத்திற்கு புகுந்த உதயகுமார் மனைவி சரண்யாவை அரிவாளால் வெட்டியுள்ளார். சரண்யாவின் அலறல் சத்தம் கேட்டு சக ஊழியர்கள் உதயகுமாரை தடுத்து போலிசில் ஒப்படைத்துள்ளனர். விசாரனையில் மனைவியின் மீது சந்தேகப்பட்டு வெட்டியதாக உதயகுமார் போலிசாரிடம் தெரிவித்துள்ளார். சரண்யாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
வெட்டிவிட்ட அதே இடத்தில் நின்று மனைவியை கணவன் ஆபாசமாக பேசுவதும் காணொளியில் இடம் பெற்றுள்ளது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval