Monday, February 2, 2015

நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்!

சுபஹானல்லாஹ் உலகம் பெரும் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது. நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்!
சொர்க்கம் நரகம் உண்டா....??? மீண்டும் மனிதன் படைக்கப்பட்டு உயிர் கொடுக்கப்பட்டு கேள்விகள் கேக்கப்படுவானா...??? 1400.... ஆண்டுகளுக்குமுன்பு...முகமது நபிகளுக்கு யார்
சொல்லிக்கொடுத்தது. எழுத படிக்கத்தெரியாத முகமது நபி இறைவனிடம் இருந்து...
தனக்கு செய்தி வருவதாக சொன்னார்கள்.அப்படி வந்த செய்திகள் தான் திருக்குரான்...அதுமட்டுமின்றி மக்களுக்கு அவ்வப்போது சில...ரகசியங்களையும் சொல்லியுள்ளார்கள்.அப்படி அவர்கள் சொன்ன....
பல உண்மையான ரகசியங்களில் இதுவும் ஒன்று... மனிதன் இறந்த பின் எத்தனை காலமானாலும் அவனது
உடம்பிலிருக்கும் இந்த எலும்பு... [உள்வால்எலும்பு (‪#‎coccyx_bone‬) முதுகுத்தண்டின் வேர்ப்பகுதி] அழியாது....இதை அழிக்கவும் முடியாது என்று முகமது நபியவர்கள் சொன்னார்கள். இதை ஆராய்ச்சி செய்ய நினைத்து...
ஜெர்மனி நாட்டை சேர்ந்த விஞ்ஞானி “ஹான்ஸ் ஸ்பீமேன்” இதை தன்னுடைய ஆய்வுக்கூடத்தில் பல ஆயிரம்
டிகிரி மூலம் கரிக்கவும் மற்றும் பல அமிலங்களைக் கொண்டு கரைக்கவும் முயற்சி செய்தார். முடிவில் அவர்க்கு
கிடைத்தது தோல்வியே..
முடிவில்... முகம்மது நபிகளின் வாக்கு உண்மையே... என்பதை இந்த உலகுக்கு தன்னுடைய சோதனையின் மூலம்
நிரூபித்தார். இதைத்தான்.... 1400 வருடங்களுக்கு முன்பே... அல்லாஹுவின் தூதர்(ஸல்) அவர்கள் மறுமையில் மனிதனுக்கு அல்லாஹ் எவ்வாறு உயிர்க் கொடுப்பான் என்பதை பின்வரும் நபிமொழி கூறுகிறது.....
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆதமின் மகனின் (மனிதனின் உடலிலுள்ள) அனைத்துப் பகுதிகளையும் மண் தின்றுவிடும்; மனிதனின் (முதுகுத்தண்டின் வேர்ப்பகுதியிலிருக்கும்) உள்வால் எலும்பின நுனியைத் தவிர!.... அதை வைத்தே அவன்(தன்தாயின்கருவறையில்முதன்முதலாக)படைக்கப்பட்டான்.அதிலிருந்தே அவன்... (மீண்டும் மறுமை நாளில்) படைக்கப்படுவான்.
அறிவிப்பவர்:
அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 5661
பிறகு அல்லாஹ், வானத்திலிருந்து ஒரு நீரை இறக்குவான்... உடனே இ(றந்துபோன)வர்கள் பச்சைப் புற்பூண்டுகள்
முளைப்பதைப் போன்று எழுவார்கள். மனிதனின் எல்லா உறுப்புகளும் (மண்ணுக்குள்) மக்கிப்போய் விடும்; ஒரே ஒரு...
எலும்பைத் தவிர! அது (அவனது முதுகுத்தண்டின் வேர்ப் பகுதியிலிருக்கும்) உள்வால் எலும்பின் (அணுவளவு)
நுனியாகும்.
அதை வைத்தே படைப்பினங்கள் (மீண்டும் மறுமை நாளில்) படைக்கப்படும்” என்று சொன்னார்கள்.
(ஹதீஸின்சுருக்கம்)
அறிவி:
அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 5660

1 comment:

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval