Saturday, April 15, 2017

5 வயது சிறுமிக்கு திருமணம் செய்துவைக்க உத்தரவிட்ட பஞ்சாயத்து!

5 வயது சிறுமிக்கு திருமணம் செய்துவைக்க உத்தரவிட்ட பஞ்சாயத்து!
உத்தரப்பிரதேசத்தில் உள்ள கிராமம் ஒன்றில் 5 வயது சிறுமி ஒருவர் 8 வயது சிறுவனை கல்யாணம் செய்துகொள்ள வேண்டுமென பஞ்சாயத்து நிர்வாகம் உத்தரவிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குணா மாவட்டம் தாராபூர் கிராமத்தை சேர்ந்த அந்த சிறுமியின் தந்தை பசு ஒன்றை கொன்றதாக கூறப்படுகிறது. இதனால் கிராமத்தில் மங்கள காரியம் நடக்கவில்லை எனக் கூறி அவருக்கு தண்டனை அளிப்பதாகக் கூறி, அவரின் 5 வயது சிறுமியை 8 வயது சிறுவனுக்கு திருமணம் செய்து கொடுக்க தாராபூர் பஞ்சாயத்து நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பெற்றோர் தவறு செய்ததாகக் கூறி, சிறுமிக்கு கல்யாணம் செய்துவைக்க உத்தரவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
courtesy; News7

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval