Saturday, April 1, 2017

சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்ட பயணிகள்!


சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்ட பயணிகள்!ரயில் டிக்கெட் பரிசோதகர் பயணியை அடித்ததாகக் கூறி சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலைய அலுவலகத்தை பயணிகள் முற்றுகையிட்டனர்

சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர்கள் வழக்கம்போல பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது, ஆவடியிலிருந்து வந்த ஏழுமலை என்ற இளைஞரிடம் பரிசோதகர்கள் டிக்கெட் கேட்டதாவும், டிக்கெட் இல்லை என்று அவர் கூறியதாகவும் தெரிகிறது. இதனையடுத்து அபராதம் விதிக்க வேண்டிய டிக்கெட் பரிசோதகர், அதனைச் செய்யாமல் சம்மந்தப்பட்ட பயணியான ஏழுமலையை தாக்கியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சக பயணிகள், தாக்குதல் சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாகவும் கூறி பயணிகள் புறநகர் ரயில் நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து பயணிகள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval