Saturday, April 8, 2017

வருமானவரிச் சட்ட மாறுதல்கள்*

Image result for income tax images01-04-2017* முதல், வருமான வரிச் சட்டத்தின் கீழ், சட்டப் பிரிவு 269STன் படி, நடைமுறைக்கு வந்துள்ள கட்டுப்பாடுகள்  குறித்த விளக்கம் கீழே…
*சட்டவிதி 269ST(a):*
ரூ.2 லட்சம் (அ) அதற்கும் மேல், ஒரு நாளில், ஒரே நபரிடமிருந்து, ஒரு விற்பனைப் பட்டியலுக்கோ (அ) பல பட்டியல்களுக்கோ ரொக்கமாகப் பணம் பெற்றால், மேற்படி விதியின் படி தண்டனைக்குரிய பரிவர்த்தனை ஆகும்.

*உதாரணம்:*
ஒரு வணிகர் (அதாவது *நீங்கள்*), ஒரு நாளில், ஒரே நபரிடமிருந்து, ஒரு விற்பனைப் பட்டியலுக்கோ (sale bill) அல்லது பல விற்பனைப் பட்டியல்களுக்காகவோ, ரூ.2,00,000/- ரொக்கமாகப் பெற்றால், தண்டம் (penalty) கட்டவேண்டும்.
*சட்டவிதி 269ST(b):*
ரூ.2 லட்சம் (அ) அதற்கும் மேல்,  ஒரு  விற்பனைப் பட்டியலுக்காக, ஒரே நபரிடமிருந்து, பல தவணைகளாக, பல நாட்களில், ரொக்கமாகப் பணம் பெற்றால், மேற்படி விதியின் படி தண்டனைக்குரிய பரிவர்த்தனை ஆகும்.
*உதாரணம்:*
ஒரு வணிகர் (அதாவது *நீங்கள்*), ஒருவருக்கு ரூ.2,00,000/- க்கு ஒரே விற்பனைப் பட்டியலாகப் போட்டு, ஒரு நாளுக்கு அதிகபட்சம் ரூ.10,000/- வீதம் பல தேதிகளில், ரூ.2,00,000/-  ரொக்கமாகப் பெற்றால், தண்டம் (penalty) கட்டவேண்டும்.
*சட்டவிதி 269ST(c):*
ரூ.2 லட்சம் (அ) அதற்கும் மேல், பல பிரிவுகளில் பல்வேறு வகையிலான தொடர் விற்பனைப் பட்டியல்களுக்கு, ஒரே நபரிடமிருந்து, ஒரே தவணையாகவோ அல்லது பல தவணைகளாகவோ, ரொக்கமாகப் பணம் பெற்றால், மேற்படி விதியின் படி தண்டனைக்குரிய பரிவர்த்தனை ஆகும்.
*உதாரணம்:*
ஒரு வணிகர் (அதாவது *நீங்கள்*), ஒரு நபருக்கு, ரூ.1,50,000/- ற்கு சேலை/துணி விற்பனைப் பட்டியலாகவும், ரூ.,30,000/-க்கு தறிக்கூலி பட்டியலாகவும், ரூ.,20,000/- க்கு துணியில் கல் பதித்த கூலிப்  பட்டியலாகவும் போட்டு, மொத்தமாகவோ அல்லது பல தவணைகளாகவோ ரூ.2,00,000/- ஐயும் ரொக்கமாகப் பெற்றால், தண்டம் (penalty) கட்டவேண்டும்.
இது அனைத்து வணிகப் பிரிவுகளுக்கும் பொருந்தும்.

*மிகமுக்கியகுறிப்பு*:
மேற்படி விதியின்படி, கட்டவேண்டிய தண்டத்தொகை எவ்வளவு தெரியுமா…?
100% (நூறு சதவிகிதம்)
அதாவது, நீங்கள் ரொக்கமாகப் பெற்ற தொகை *முழுவதையும்* அப்படியே அரசுக்கு செலுத்திவிட வேண்டும். *திருவாரூர் விஜயபுரம் வர்த்தகர் சங்கம்*  TVRVVS
(புரிதலுக்காக தமிழில் கொடுக்கப்பட்டுள்ளது. அவரவர் தமது ஆடிட்டர்களிடம் உறுதி செய்து கொள்ளவும்)

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval