Thursday, May 21, 2015

சென்னையில் நோன்பு வைக்க இலவச சஹர் சாப்பாடு....!!

சென்னைக்கு நோன்பு காலங்களில் வேலையாக செல்லக்கூடிய சகோதரர்கள் சஹர் உணவிற்கு எவ்வித சிரமும் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.
இறைவனின் மாபெரும் கிருபையினால் சென்னை தி நகரில் ஜி.என்.செட்டி சாலையில் அமைந்துள்ள விருதுநகர் ஹலால் ஹோட்டலில் இலவச சஹர் உணவு வழங்கப்படுகிறது.
கடந்த வருடங்களிலும் இதேப்போன்று இலவசமாக சஹர் உணவு வழங்கப்பட்டுள்ளது.
நோன்பு காலங்களில் 30 நாட்களுக்கும் அதிகாலை 3:30 முதல் நோன்பாளிகளுக்கு சுவையான தரமிக்க அசைவ சாப்பாடு வழங்கப்படுகிறது.
ஒரு நாளைக்கு சுமார் 250 முதல் 300 நபர்கள் வரை ஏழை பணக்காரர்கள் என்ற வித்தியாசமின்றி சஹர் உணவு சாப்பிட்டு செல்கிறார்கள்.
இது தொடர்பாக உரிமையாளரிடத்தில் இத்தனை பேருக்கு அதுவும் இலவசமாக மாதம் முழுவதும் எப்படி சேவை செய்கிறீர்கள் என்று விசாரித்தபோது....
இந்த சென்னைக்கு சாதாரண ஹோட்டல் வைத்து பிழைக்க ஊரிலிருந்து வந்தோம்...
அல்லாஹ்வுடைய மிகப்பெரிய கருணையால் இன்று நல்ல நிலையில் இருக்கிறோம் என்ற ஒரே வார்த்தையோடு நிறுத்திக்கொண்டார்.
அல்ஹம்துலில்லாஹ்...
அல்லாஹ் அவருக்கு தம்முடைய அருளை மென்மேலும் வாரி வழங்குவானாக....
(அதிகப்படியாக Share செய்து நோன்பாளிகளுக்கு பயனுள்ளதாக ஆக்குங்கள்...)

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval