Thursday, May 21, 2015

கடலில் தத்தளிக்கும் பர்மா முஸ்லிம்களை மீட்க விரைந்தது துருக்கி ராணுவ கப்பல்.....!!

பர்மாவில் புத்த மத பயங்கரவாதிகளால் அரசின் துணையுடன் முஸ்லிம் இனப்படுகொலை நடத்தப்பட்டு ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
உயிருக்கு அஞ்சி நடுங்கிய பல்லாயிரக்கணக்கான மக்கள் கடல் வழியாக பர்மாவிலிருந்து வெளியேறி நடுக்கடலில் தவித்து வருகின்றனர்.
அவர்களை மீட்டெடுக்க துருக்கி ராணுவ கப்பல் விரைந்துள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டும் இதே பர்மாவில் இதேப்போன்று ரமலான் நெருங்கிய வேளையில் புத்த மத பயங்கரவாதிகளால் அரசின் துணையுடன் இதேப்போன்ற இனப்படுகொலை நடைபெற்றது.
அப்போதும் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டனர்.
உலக நாடுகள் மௌனம் காத்த வேளையில் துருக்கி பிரதமரின் மனைவி அவர்கள் பர்மாவுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை தம்முடைய மார்பில் அனைத்து கண்ணீர் சிந்தினார். பர்மா மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தார்.
அதேப்போன்று இப்பொழுதும் கடலில் தத்தளிக்கும் மக்களை மீட்பதற்கு துருக்கியின் ராணுவ கப்பல் விரைந்துள்ளது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval