Saturday, December 31, 2016

நாளை முதல் ஏடிஎம்-களில் 4,500 ரூபாய் எடுக்கலாம்

Image result for atm images
புத்தாண்டான நாளை முதல் ஏடிஎம்களில் 4,500 ரூபாய் பணம் எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கறுப்புப் பணம் மற்றும் கள்ள பணத்தை ஒழிக்கும் விதமாக நாடெங்கும் உள்ள பழைய 500, மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் 8-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து பணத்தை வங்கிகளில் பெறுவதற்கும், ஏடிஎம்-மில் பணம் எடுப்பதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி தற்போது நாள் ஒன்றுக்கு 2,500 ரூபாய் மட்டுமே ஏடிஎம் மூலம் பணம் எடுக்க அனுமதிக்கப்படுகிறது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 50 நாட்கள் கடந்துள்ள நிலையில், புதிய அறிவிப்புகள் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் இருந்தனர். இந்நிலையில், ஏடிஎம்மில் கூடுதல் பணம் எடுக்கலாம் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பின் படி புத்தாண்டு தினமான நாளை முதல் ஏடிஎம்-களில் 4,500 ரூபாய் பணம் எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வாரம் ஒன்றுக்கு 24,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்கிற கட்டுப்பாடு நீடிக்கிறது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பணமதிப்பிழப்பு தொடர்பான புதிய அறிவிப்புகளை இன்று வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval