Monday, August 10, 2015

செய்யும் தர்மத்தையும் பிரித்து வைத்து வாழத் தெரிய வேண்டும்.


செட்டி நாட்டு வீதியொன்றில் கீரை
விற்று கொண்டு செல்கிறாள் ஒரு பெண்.
வீட்டு வாசலில் மகனோடு அமர்ந்திருந்த தாய், கீரை
வாங்க அவளை கூப்பிடுகிறாள்.
" ஒரு கட்டு கீரை என்ன விலை....?"
" ஓரணாம்மா".


"ஓரணாவா....? அரையணாதான் தருவேன்.
அரையணான்னு சொல்லி நாலு கட்டு கொடுத்திட்டு போ".
"இல்லம்மா வராதும்மா".
" அதெல்லாம் முடியாது. அரையணாதான்".
பேரம் பேசுகிறாள் அந்த தாய்.
பேரத்திற்கு ஒத்துக் கொள்ளாத அந்த பெண் கூடையை எடுத்துக்கொண்டு சிறிது தூரம்
சென்று விட்டு
"மேல காலணா போட்டு கொடுங்கம்மா" என்கிறாள்.
"முடியவே முடியாது. கட்டுக்கு அரையணாதான்
தருவேன்"... என்று பிடிவாதம் பிடித்தாள்.
கீரைக்காரி சிறிது யோசனைக்கு பிறகு "சரிம்மா
உன் விருப்பம்" என்று கூறி விட்டு நாலு கட்டு கீரையை கொடுத்து விட்டு ரெண்டணா காசை
வாங்கி கொண்டு கூடையை தூக்கி தலையில் வைக்க போகும் போது கீழே சரிந்தாள்.
"என்னடியம்மா காலை ஏதும் சாப்பிடலயா...?" என்று
அந்த தாய் கேட்க...
"இல்லம்மா போய்தான் கஞ்சி காய்ச்சணும்".
"சரி. இரு இதோ வர்றேன்." என்று கூறிவிட்டு வீட்டுக்குள் சென்றவள், திரும்பும்போது ஒரு தட்டில் ஆறு இட்லியும், சட்னியோடு வந்தாள்.
"இந்தா சாப்ட்டு போ" என்று கீரைக்காரியிடம் கொடுத்தாள்.
எல்லாவற்றையும் பார்த்து கொண்டிருந்த அந்த
தாயினுடைய மகன் "ஏம்மா அரையணாவுக்கு
பேரம் பேசுனிங்க...
ஒரு இட்லி அரையணான்னு
வச்சுகிட்டாக்கூட ஆறு இட்லிக்கு
மூணு அணா வருதும்மா.....?" என்று கேட்க...
அதற்கு அந்த தாய்,
"வியாபாரத்துல தர்மம் பார்க்ககூடாது கண்ணா...
தர்மத்துல வியாபாரம் பார்க்க கூடாதுப்பா" என்று
கூறினாள்...!!!".
இதுதான் வாழ்க்கை.
செய்யும் தொழிலையும்,
செய்யும் தர்மத்தையும்
பிரித்து வைத்து வாழத்
தெரிய வேண்டும்.

courtesy;facebook

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval