Tuesday, August 11, 2015

சவுதி அரேபியாவில் தமது ஊழியர் இஸ்லாத்தில் இணைந்த நிகழ்வை சிறப்பாக கொண்டாடிய முதலாளி.!

சவுதி அரேபியாவின் உணவு விடுதி ஒன்றில் பணியாற்றி வரும் பிலிப்பைன்ஸ் நாட்டை சார்ந்த கிருத்துவ இளைஞர் ஒருவர் அண்மையில் தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்டார்.
தமது தொழிலாளி இஸ்லாத்தில் இணைந்ததாலும் இறையருளால் அவர் நிரந்தர நரகத்தில் இருந்து தப்பிவிட்டார் என்பதினாலும் அவரது முதலாளி மட்டற்ற மகிழ்ச்சி கொண்டார்.

தமது ஊழியர் இஸ்லாத்தில் இணைந்த நிகழ்வை சிறப்பாக கொண்டாட விரும்பிய முதலாளி தமது நண்பர்கள் அனைவர்களுக்கும் விருந்துக்கான அழைப்பை விடுத்தார்.

தமது ஊழியரிடம் இந்த விசயத்தை சொல்லாமலேயே அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதர்காக ஊழியரிடம் இன்று ஒரு விருந்து இங்கே நடைபெற உள்ளது அதர்கான தயாரிப்புகளை சிறப்பாக செய்து விடு என்று .

இஸ்லாத்தில் இணைந்த தமது ஊழியரிடம் கூறினார்தமக்காகத்தான் இந்த கொண்டாட்டம் என்பதை அறியாமலேயே கொண்டாட்டத்திற்கான தயாரிப்புகளை சிறப்பாக செய்து முடித்தார் ஊழியர்.

இறுதியில் விருந்தாளிகள் அனைவரும் வந்ததும் தமது ஊழியரை அவர்களிடம் அறிமுக படுத்தி இவர் இஸ்லாத்தை ஏற்ற மகிழ்ச்சியில் இவருக்காக தான் இந்த விருந்திற்க்கு ஏற்பாடு செய்தேன் என்று முதலாளி கூறியதை செவியுற்ற ஊழியரின் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்தது அதுதொடர்ப்பான படத்தை தான் நீங்கள் பார்க்ன்றீர்கள்.
.

நன்றி: வி. களத்தூர் எக்ஸ்பிரஸ் 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval